தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுகிறோம் - வாஜ்பாய்
தாமரைக்கனி மீதான மாடு கடத்தல் தடுப்பு வழக்கு வாபஸ்
சென்னை:
இறைச்சிக்காக கொண்டு செல்லப்பட்ட மாடுகள் இருந்த லாரிகளைத் தடுத்ததாக அதிமுக எம்.எல்.ஏ. தாமரைக்கனி மீது போடப்பட்டிருந்த வழக்கைரத்து செய்வதாக தமிழக முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.
இதுதொடர்பாக தமிழக அரசின் சார்பில் வெளயிடப்பட்ட அறிக்கை:
இந்த மாதம் 7-ம் தேதி தஞ்சாவூரில் இருந்து கொண்டு வந்த மாடுகள் அடங்கிய லாரியை, அதிமுக எம்.எல்.ஏ. தாமரைக்கனி வழி மறித்துத்தடுத்ததாக லாரி டிரைவர் ரவிச்சந்திரின் புகார் கொடுத்திருந்தார். இதன் அடிப்படையில், ஸ்ரீவில்லிபுத்தூர் காவல் நிலையத்தில் தாமரைக்கனி மற்றும் 3 பேர்மீது வழக்குத் தொடரப்பட்டது.
இவர்கள் மீது இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 341, 506(1) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கு குறித்து முதல்வரின் கவனத்திற்குக் கொண்டு செல்லப்பட்டது. வழக்கின் மேல் விசாரணையைக் கைவிடுமாறு தற்போது முதல்வர்உத்தரவிட்டுள்ளார் என்று அறிக்கையில் கூறப்பட்டிருந்தது.