தமிழகத்தில் இன்று

Subscribe to Oneindia Tamil

மீண்டும் போராட்டக் களத்தில் நீலகிரி தேயிலை விவசாயிகள்

கோவை:

நீலகிரியில் தேயிலை விவசாயிகள் மீண்டும் போராட்டத்தைத் துவக்கினர். தேயிலை பிரச்னையில் அரசு விரைவில்நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரி, திங்கள்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர்.

மறியலில் 2 ஆயிரத்திற்கும் அதிகமான விவசாயிகள் கலந்து கொண்டனர். மறியலின் காரணமாக மாலையில் பலமணி நேரம் போக்குவரத்து பாதிப்படைந்தது. நீலகிரி மாவட்டத்தில் தேயிலை விலை வீழ்ச்சியடைந்ததைத்தொடர்ந்து, கடந்த சில மாதங்களாக விவசாயிகள் கடும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதையடுத்து அரசு அறிவித்த மானியம் போதுமானதாக இல்லை எனவும், தேயிலை விலை வீழ்ச்சியைத்தடுக்கவும், ஏற்றுமதியைப் பெருக்கவும் உடனடியாக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிவிவசாயிகள் தற்போது போராட்டத்தை துவக்கியுள்ளனர்.

திங்கள்கிழமை நடந்த இந்தப் போராட்டத்தில், விவசாயிகள் மற்றும் அவரது குடும்பத்தைச் சேர்ந்த பெண்கள் பலர்பங்கேற்றனர். இந்த மறியலைக் கைவிட போலீசார் கோரிக்கை விடுத்தும், பயனில்லாததால், விவசாயிகள் உட்படஅனைத்துக் கட்சித் தலைவர்களையும் போலீசார் கைது செய்து, பின்னர் விடுவித்தனர்.

தங்களது கைது குறித்து மாநில அரசுக்குத் தெரிவிக்க வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+