தமிழகத்தில் இன்று
குழாயடிச் சண்டையில் முதியவரைக் கொன்றவருக்கு 1 ஆண்டு சிறை
கோவை:
கோவையில் தண்ணீர் பிடிப்பதில் நடந்த குழாயடிச் சண்டையில், முதியவர் கொலை செய்யப்பட்டார். இந்தவழக்கில், மின்வாரிய ஊழியருக்கு ஓராண்டு கடுங்காவல் சிறைத் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
கோவை மாவட்டம், காரமடை அருகே உள்ள மேட்டுப்பட்டியைச் சேர்ந்தவர் சவுந்தர்ராஜன். இவர் தமிழ்நாடுமின்சார வாரிய ஊழியராகப் பணியாற்றி வந்தார். இவரது வீட்டிற்கு அருகில் ஒரு பொது குடிநீர் விநயோகக்குழாய் உள்ளது. இந்தக் குழாயில் தண்ணீர் பிடிப்பதில், பக்கத்து வீட்டுக்காரர் கண்ணையன் (57) என்பவருடன்தகராறு ஏற்பட்டது.
சம்பவத்தன்று கண்ணையனுக்கும், சவுந்தர்ராஜன் குடும்பத்திற்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில்கண்ணையன் சவுந்தர்ராஜனின் குடும்பத்தினரைத் தாக்கியுள்ளார். இதில் அனைவரும் காயமடைந்தனர்.
இதை அறிந்த சவுந்தர்ராஜன், கண்ணையனை அடித்து உதைத்துள்ளார். இதில், கண்ணையன் இறந்து போனார்.இந்த சம்பவம் குறித்து காரமடை போலீசார், சவுந்தர்ராஜனது உறவினர்கள் மீது வழக்குத் தொடர்ந்தனர்.
கோவை இரண்டாவது கூடுதல் முதன்மை நீதிமன்றத்தில் நடந்த இந்த வழக்கில், சவுந்தர்ராஜனுக்கு ஓராண்டுகடுங்காவல் தண்டனையும், அவரது உறவினர்கள் 5 பேருக்கு தலா இரண்டு மாதம் கடுங்காவல் தண்டனையும்விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது.












Click it and Unblock the Notifications