தமிழகத்தில் இன்று
ஆயுதங்களுடன் இந்தியாவுக்குள் நுழைந்த 4 பாகிஸ்தானியர்கள் கைது
டெல்லி:
பாகிஸ்தான் எல்லையிலிருந்து குஜராத் மூலம் இந்தியாவுக்குள் நுழைய முயன்ற நான்கு பேரை சிபிஐ கைது செய்து, அவர்களிடமிருந்து ஆயுதங்கள்,வெடிமருந்துகள், போதைப்பொருட்கள் ஆகியவற்றைப் பறிமுதல் செய்தது.
ஜாவித் கான், சிரானி கான், அயுப்கான், அப்துல் கரீம் ஷேக் ஆகிய நால்வரும் கைது செய்யப்பட்டவர்கள். இதுகுறித்து சிபிஐ இயக்குநர் பி.சி.சர்மாகூறுகையில், பாகிஸ்தான் எல்லையிலிருந்து லாரி மூலம் குஜராத்திற்கு நுழைய முயன்ற போது இந்த நான்கு பேரையும் சந்தேகத்தின் பேரில் சிபிஐஅதிகாரிகள் சோதனை செய்தனர்.
அப்போது அவர்கள் வந்த லாரியின் டயருக்குள் ஆயுதங்கள் மற்றும் போதைப்பொருட்கள் மறைத்து வைக்கப்பட்டிருப்பது தெரிந்தது. டயரிலிருந்து 25துப்பாக்கிகள், 50 சுற்று துப்பாக்கிக் குண்டுகள், 6 கிலோ ஹெராயின், 200 சுற்றுக்கள் சுடக்கூடிய வெடிப்பொருட்கள் போன்றவைகைப்பற்றப்பட்டது.
கைது செய்யப்பட்ட நான்கு பேரும் விசாரணைக்காக டெல்லிக்குக் கொண்டு செல்லப்படுவார்கள். அவர்கள் எந்த கடத்தல் அல்லது தீவிரவாதக்கும்பலைச் சேர்ந்தவர்கள், இந்தியாவில் அவர்கள் போதைப் பொருட்களை யாரிடம் விற்பனை செய்கிறார்கள்? அவர்கள் மறைத்து வைத்திருந்தஆயுதகள் ஆகியவை குறித்து விசாரிக்கப்படும் என்றார்.
கடந்த நான்கு மாதங்களுக்கு முன் இந்திய எல்லையில் ரூ 310 கோடி பெறுமானமுள்ள 31 கிலோ போதைப் பொருட்கள் கடத்த முயன்ற கும்பல் கைதுசெய்யப்பட்டு போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
ஐ.ஏ.என்.எஸ்.