தமிழகத்தில் இன்று
ஓய்விலிருந்து திரும்புகிறார் ஜெயலலிதா
சென்னை:
ஹைதராபாத்தில் ஓய்வு எடுத்து வரும் அ.தி.மு.க பொதுச்செயலாளர் ஜெயலலிதா, தனது தோழி சசிகலாவுடன் 28ம் தேதி சென்னை திரும்புகிறார்.
அ.தி.மு.க.பொதுச்செயலாளர் ஜெயலலிதாவுக்கு ஹைதராபாத்தில் திராட்சைத் தோட்ட பங்களா உள்ளது.உயிர்த்தோழி சசிகலாவுடன் அவ்வப்போது அங்கு சென்று ஓய்வெடுத்து வருவது வழக்கம். கடந்த 11 ம் தேதிஇவரும், சசிகலாவும் ஓய்வெடுப்பதற்காக ஹைதராபாத்துக்குச் சென்றனர்.
இதற்கிடையே தமிழகத்தில் உள்ள 234 சட்டசபைத் தொகுதிகளில் அ.தி.மு.க.வுக்கு எந்த அளவுக்கு செல்வாக்குஇருக்கிறது என்பதைக் கண்டறிய ஜெயலலிதா குழுக்களை நியமித்திருக்கிறார்.
இந்தக் குழுக்கள் தங்களது இறுதி அறிக்கையை வரும் 29 ம் தேதி ஜெயலலிதாவிடம் சமர்ப்பிக்க உள்ளன. அதன்அடிப்படையில் மூத்த தலைவர்களின் கூட்டத்தைக் கூட்டி தேர்தல் நிலவரம் குறித்து ஆலோசனை நடத்துவார்.இதற்காக ஹைதராபாத்திலிருந்து ஜெயலலிதா 28 ம் தேதி சென்னை திரும்புகிறார்.