தமிழகத்தில் இன்று
வனபத்ரகாளியம்மன் கோவிலில் தீ மிதி விழா
கோவை:
கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் வனபத்ர காளியம்மன் கோயில் ஆடிக்குண்டம் திருவிழாவில் பரவசத்துடன் பக்தர்கள் குண்டம் (தீ மிதி) இறங்கினர்.
மேட்டுப்பாளையம் அருகே தேக்கம்பட்டியில் உள்ளது வன பத்ரகாளியம்மன்கோயில். இந்தக் கோயிலில் ஆண்டு தோறும் ஆடி மாதம், தீ மிதி திருவிழாநடைபெற்று வருகிறது. இந்த ஆண்டும் வழக்கம்போல் ஜூலை 25ம் தேதி ஆடிக்குண்டம் திருவிழா நடந்தது.
இதில் கோவை, நீலகிரி, ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த பக்தர்கள் பெருமளவில்கலந்து கொண்டனர். அதிகாலையில் துவங்கிய விழாவில், 3 அடி அகலத்தில், 38 அடிநீளத்திற்கு தீ வளர்க்கப்பட்டது. இதில், இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள்இறங்கி தீ மிதித்தனர்.
முன்னதாக, கோயில் அருகே உள்ள பவானி நதியில் பக்தர்கள் புனித நீராடினர்.கோயிலின் தலைமைப் பூசாரி குமரேசன், வனபத்ர காளியம்மனுக்கு சிறப்பு பூஜைகள்செய்தார்.












Click it and Unblock the Notifications