தமிழகத்தில் இன்று

Subscribe to Oneindia Tamil

யாழ். போர் குறித்த படத்திற்கு இலங்கை அரசு தடை

கொழும்பு:

விடுதலைப் புலிகளுக்கு எதிராக நடைபெற்று வரும் போர் தொடர்பான செய்திகளையும், சம்பவங்களையும் சித்தரிக்கும் படத்தை வெளியிட இலங்கை அரசு தடைவிதித்துள்ளது.

"புராஹந்தா கலுவாரா" (பவுர்ணமி நாளில் ஒரு மரணம்) என்ற அந்த சிங்கள மொழிப் படத்தை பிரசன்னா விதநாகே என்பவர் இயக்கியுள்ளார்.

இலங்கையின் வட பகுதியில் விடுதலைப் புலிகளுக்கும், இலங்கை ராணுவத்துக்கும் இடையே நடைபெற்று வரும் போரின் நெறிமுறைகளை விளக்குவதாக இப்படம் உள்ளது.

கடந்த 20 ஆண்டுகளாக நடைபெற்று வரும் இப்போருக்கு இடையே மக்கள் வசித்து வருகின்றனர். இனிமேல் மக்கள் நிம்மதியுடனும்,பாதுகாப்பாகவும் வாழ வழி பிறக்கும் என்று எனக்குத் தெரியவில்லை.

எனது இக் கருத்தை விளக்கும் வகையில் படத்தை நான் எடுத்துள்ளேன். போர் நடைபெறும் வரை இந் நிலை நீடித்தால் எனது படத்தை வெளியிட இலங்கைஅரசு ஒருபோதும் அனுமதிக்காது.

இப் படத்தில் போர் நடைபெறும் பகுதிகளில் வசிக்கும் மக்களின் வாழ்க்கை, அவர்களில் சிலரது பேட்டிகள் உள்ளிட்டவை இடம் பெற்றிருக்கின்றனஎன்றார் விதநாகே.

சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்ட பல விருதுகளைப் பெற்றுள்ள இப் படத்தை இலங்கை திரைப்பட தணிக்கைக் குழு அதிகாரிகள் பார்வையிட்டுதிரையிட அனுமதி அளித்துள்ளனர்.

ஜூலை 28-ம் தேதி திரையிடுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வந்த நிலையில், இப் படத்தை இலங்கை அரசு தடை விதித்துள்ளது.

இலங்கையில் நிலைமை சீரடைந்த பிறகு படத்தை வெளியிட அனுமதிக்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது.

யு.என்.ஐ.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+