தமிழகத்தில் இன்று
என்று தணியும் இந்த ஜாதி மோகம்?
ஜெயம்கொண்டம் (புதுக்கோட்டை):
பெரம்பலூர் மாவட்டம் மீன்சுருட்டி அருகே சொக்கலிங்கபுரம் என்ற பகுதியில் ஆதி திராவிட இளைஞர்களுக்கும், வன்னிய சமூகத்தினருக்கும் இடையே நடந்தமோதலையடுத்து அங்கு பதற்றம் நிலவுகிறது.
2 ஆதி திராவிட இளைஞர்களை, வன்னிய சமூக இளைஞர் ஒருவர் தாக்கியதையடுத்து அங்கு பதற்றம் ஏற்பட்டுள்ளது. ஆதி திராவிட வகுப்பைச் சேர்ந்தஇளவரசன் (23), மதியழகன் (25) ஆகியோரை, வாங்குடி கிராமத்தைச் சேர்ந்த செந்தில் என்ற இளைஞர் மோட்டார் சைக்கிளில் வந்து கத்தியால் குத்திவிட்டுத் தப்பி விட்டார். இவர் வன்னிய சமூகத்தைச் சேர்ந்தவர்.
இத்தகவல் ஆதி திராவிட வகுப்பினரிடையே ஆத்திரத்தை ஏற்படுத்தியது. இதையடுத்து ஆதி திராவிட இளைஞர்கள் ஒரு பிரிவாக கிளம்பினர். வன்னியசமூகத்தைச் சேர்ந்த ஓய்வு பெற்ற ஆசிரியர் கோவிந்தராஜ் என்பவரை வழிமறித்து அவரைக் கத்தியால் குத்திவிட்டுத் தப்பினர்.
தகவல் அறிந்ததும் போலீஸார் சொக்கலிங்கபுரத்திற்கு விரைந்து வந்தனர். காயமடைந்தவர்கள் தஞ்சாவூர் அரசு மருத்துவமனையில்அனுமதிக்கப்பட்டனர்.
இந்த சம்பவம் தொடர்பாக நான்கு பேர் கைது செய்யப்பட்டனர். மேலும் சிலரை போலீஸார் தேடி வருகின்றனர். கைது செய்யப்பட்டவர்கள் நீதிமன்றக்காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.
சொக்கலிங்கபுரம் மற்றும் வாங்குடி கிராமங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
யு.என்.ஐ.