தமிழகத்தில் இன்று
கார்கில் தியாகிகளை நினைவு கூர்ந்த பாண்டிச்சேரி
பாண்டிச்சேரி:
கார்கில் போரில் உயிர்த்தியாகம் செய்த வீரர்களுக்கு பாண்டிச்சேரியில் அஞ்சலி செலுத்தப்பட்டது.
கடந்த ஆண்டு பாகிஸ்தான் தீவிரவாதிகள் இந்திய எல்லைப் பகுதியில் காஷ்மீர் பள்ளத்தாக்கிலுள்ள கார்கில் பகுதியில் ஊடுறுவினர்.அவர்களைவிரட்டியப்பதற்காக நடந்த சண்டையில் இந்திய ராணுவத்தில் பல உ.யர் அதிகாரிகளும், பல ராணுவ வீரர்களும் தங்கள் தாய்மண்ணைக் காக்க உயிர்த்தியாகம் செய்தனர்.
கார்கில் போரின் முதலாமாண்டு நினைவு தினமான புதன்கிழமை, பாண்டிச்சேரியில், கார்கில் தியாகிகள் நினைவு கூரப்பட்டனர்.
துணை நிலை ஆளுனர் ரஜினி ராய், பாண்டிச்சேரி முதல்வர் பி.சண்முகம் மற்றும் அவரது அமைச்சரவை சகாக்கள், உயர் அதிகாரிளும் அஞ்சலி நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர். இவர்கள் புதிதாக கட்டப்பட்டுள்ள கார்கில் வீரர்களுக்கான நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.
யு.என்.ஐ.