தமிழகத்தில் இன்று
அன்னிய செலாவணி மோசடியில் சித்தி
சென்னை:
அன்னிய செலாவணி ஒழுங்கு முறைச் சட்டத்தை (பெரா) மீறியுள்ளதாக நடிகை ராதிகா மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
பெரா சட்டத்த மீறியவர்கள் மற்றும் வருமான வரி பாக்கி வைத்திருப்பவர்கள் குறித்த பட்டியலைசெவ்வாய்க்கிழமை நிதித்துறை இணையமைச்சர் தனஞ்ஜெயகுமார் ராஜ்யசபாவில் அறிவித்தார்.
தமிழ் படவுலகத்தைச் சேர்ந்த பலர் இந்தப் பட்டியலில் இடம் பெற்றுள்ளனர். நடிகைகள் ராதிகா, மாதவி ஆகியோர்அன்னிய செலாவணி மோசடி புரிந்துள்ளதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளனர்.
வருமான வரி பாக்கி வைத்துள்ள தமிழ் திரையுலகினர் வருமாறு:
நடிகர்கள் சிவாஜி கணேசன், டி.ஆர்.ராமச்சந்திரன், எஸ்.எஸ்.சந்திரன், விஜயகாந்த், சரத்குமார், பிரபுதேவா,கவுண்டமணி, ராம்கி, அர்ஜூன், நடிகைகள் ஸ்ரீதேவி, குஷ்பு, சவுந்தர்யா, சுகன்யா, அபிலாஷா, ரம்யாகிருஷ்ணா,சில்க் ஸ்மிதா, குட்டி பத்மினி, ரம்பா, விஜயசாந்தி, இயக்குநர் ஆர்.கே.செல்வமணி, பாடகர் கே.ஜே.யேசுதாஸ்,தயாரிப்பாளர்கள் ஏ.எம்.ரத்னம், ஜிவி, ஆர்.பி.செளத்ரி, இப்ராஹிம் ராவுத்தர், ஆர்.டி.பாஸ்கர் ஆகியோர் வரிஏய்ப்பு செய்தவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications