தமிழகத்தில் இன்று
சர்க்கரை உற்பத்தி அதிகரிப்பு
டெல்லி:
இந்தியாவில் சர்க்கரை உற்பத்தி அதிகரித்துள்ளது. நடப்பு ஆண்டில் ஜூன் மாதம் வரை 2.76 லட்சம் டன் சர்க்கரை உற்பத்தி செய்யப்பட்டுள்ளது.
இது கடந்த ஆண்டு இதே காலத்தில் உற்பத்தி செய்யப்பட்ட சர்க்கரை அளவை விட 12 ஆயிரம் டன் அதிகமாகும். இந்திய சர்க்கரை ஆலை சங்கம் மற்றும்தேசிய கூட்டுறவு ஆலைகள் கூட்டமைப்பும் இணைந்து வெளியிட்ட அறிக்கையில் இத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
1999-2000-ம் ஆண்டு சீசனின் முதல் 9 மாதத்தில் மொத்தம் 178.91 லட்சம் டன் சர்க்கரை உற்பத்தி செய்யப்பட்டுள்ளது.
ஜூன் 30-ம் தேதி நிலவரப்படி சர்க்கரை கையிருப்பு 136.05 லட்சம் டன்னாகும். இதில் 0.20 லட்சம் டன் இறக்குமதி செய்யப்பட்ட சர்க்கரையாகும்.கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் 101.06 லட்சம் டன் சர்க்கரைதான் கையிருப்பில் இருந்தது குறிப்பிடத்தக்கது.
நடப்பு சீசனில் ஜூன் மாதம் வரை 115.81 லட்சம் டன் சர்க்கரை உள்நாட்டுத் தேவைக்குப் பயன்படுத்தப்பட்டுள்ளது.
யு.என்.ஐ.