தமிழகத்தில் இன்று
பா.ம.க.வைத் தடை செய்யக் கோருகிறது வன்னியர் சங்கம்
சென்னை:
வன்முறை அரசியலை நடத்தி வரும் பாட்டாளி மக்கள் கட்சியைத் தடை செய்ய வேண்டும்என்று வன்னியர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
சங்கத் தலைவர் ஏ.கே.நடராஜன் சென்னையில் செய்தியாளர்களிடம் பேசுகையில், தமிழகராஜீவ் காங்கிரஸ் தலைவர் வாழப்பாடி ராமமூர்த்தி மீது விழுப்புரம் அருகே தாக்குதல்நடத்தப்பட்டுள்ளது. பாட்டாளி மக்கள் கட்சியின் வன்முறை அரசியலுக்கு இது ஒருஉதாரணம்.
பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர்கள் சேர்த்துள்ள சொத்துக்கள் குறித்து சி.பி.ஐ. விசாரணைநடத்த வேண்டும்.
ஜாதி வாரியான இட ஒதுக்கீட்டை அமல்படுத்த உறுதி கொடுத்தால் அந்தக் கூட்டணிக்குவரும் சட்டமன்றத் தேர்தலில் ஆதரவு தருவோம். எங்களது இந்தக் கோரிக்கை குறித்துபரிசீலிப்பதார அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா உறுதி கொடுத்துள்ளார்.
இப்போதைக்கு வரும் சட்டமன்றத் தேர்தலில் நாங்கள் போட்டியிடுவதாக இல்லை. மாறாக,அதிமுக கூட்டணியை ஆதரிக்கத் திட்டமிட்டுள்ளோம் என்றார்.