தமிழகத்தில் இன்று
Subscribe to Oneindia Tamil
டான்சி ஊழல் வழக்கு ஒத்திவைப்பு
சென்னை:
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மீதான டான்சி ஊழல் வழக்கு வரும் 27 ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
டான்சி ஊழல் வழக்கு குறித்த விசாரணை சென்னை மூன்றாவது தனிநீதிமன்றத்தில் தனிநீதிபதி அன்பழகன்தலைமையில் நடந்து வருகிறது. இவ்வழக்கில் அ.தி.மு.க பொதுச்செயலாளர் ஜெயலலிதா, அவரது தோழி சசிகலாஉள்பட பலர் மீது ஊழல் குற்றச்சாட்டுப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
புதன்கிழமை தனிநீதிமன்றத்தில் இவ்வழக்கு விசாரணைக்கு வந்த போது சசிகலா தரப்பில் மூன்று சாட்சிகள்விசாரிக்கப்பட்டனர்.
இதைத்தொடர்ந்து மூன்றாவது தனிநீதிபதி அன்பழகன் இவ்வழக்கை வரும் 27 ம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.
முன்னதாக இவ்வழக்கில் அரசுத் தரப்பு விசாரணை முடிவடைந்ததையடுத்து கடந்த 24 ம் தேதி ஜெயலலிதாதரப்பில் இரண்டு ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் விசாரிக்கப்பட்டனர்.












Click it and Unblock the Notifications