தமிழகத்தில் இன்று
தீவிரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கையைக் குறைக்கிறது ராணுவம்
ஸ்ரீநகர்:
காஷ்மீரில் தீவிரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கையை இந்திய ராணுவம் குறைத்துக்கொண்டுள்ளது.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் தீவிரவாத நடவடிக்கையில் ஈடுபட்டு வரும் முக்கியதீவிரவாத அமைப்பான ஹிஸ்புல் முஜாஹிதீன் என்ற அமைப்பு 3 மாத போர் நிறுத்தம்அறிவித்துள்ளது.
இதையடுத்து தீவிரவாதிகளைத் தேடும் வேட்டையை இந்திய ராணுவத்தினர்குறைத்துக் கொண்டுள்ளனர். இத் தகவலை மூத்த ராணுவ அதிகாரி மேஜர் ஜெனர்லபசந்த் சிங் தெரிவித்தார்.
தீவிரவாதிகள் போர் நிறுத்தம் அறிவித்துள்ள மகிழ்ச்சியளிக்கிறது. தீவிரவாதிகளின்அறிவிப்புக்குப் பிறகு எந்த தீவிர நடவடிக்கையையும் நாங்கள் மேற்கொள்ளவில்லை.
தீவிரவாதிகளிடமிருந்து எந்த தாக்குதலும் இல்லாத வரையில் நாங்களும் எந்ததாக்குதலும் நடத்தமாட்டோம் என்றார் அவர். தீவிரவாதிகளுக்கு எதிரான தாக்குதல்நடவடிக்கையைத்தான் குறைத்துக் கொண்டுள்ளோமே தவிர அவர்களைத் தேடும்பணி தொடரும் என்றார் அவர்.
3 மாத போர்நிறுத்தம் அறிவித்துள்ள பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பானஹிஸ்புல் முஜாஹிதீன் அமைப்பு, மத்திய அரசுடன் பேச்சு நடத்த தயாராக இருப்பதாகத்தெரிவித்துள்ளது.
தீவிரவாதிகளின் இந்த முடிவை மத்திய அரசு வரவேற்றுள்ள அதே நேரத்தில் காஷ்மீரில்தீவிரவாத நடவடிக்கையில் ஈடுபட்டு வரும் மற்றொரு தீவிரவாத அமைப்பு இதற்குக்கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளது.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications