தமிழகத்தில் இன்று
மருத்துவமனையில் ஜோதிபாசு
டெல்லி:
மேற்கு வங்க முதல்வர் ஜோதிபாசு, டெல்லியில் நடந்த கட்சிக் கூட்டத்தின் போது திடீரென்று மயங்கி விழுந்தார். அவர் உடனடியாக ராம் மனோகர்லோகியா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
பின்னர், அகில இந்த மருத்துவ அறிவியல் கழக மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அவசர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்ட அவருக்குத் தீவிரசிகிச்சை அளிக்கப்பட்டது. இந்தியாவிலேயே தொடர்ந்து 22 ஆண்டுகளாக முதல்வராக இருப்பவர் ஜோதிபாசு. 87 வயதாகும் இவர் இந்த ஆண்டு இறுதியில்அரசியலிலிருந்து ஓய்வு பெற இருக்கிறார்.
மார்க்சிஸ்ட் கட்சித் தலைவரும், எம்.பி.யுமான சோம்நாத் சாட்டர்ஜி, ஜோதி பாசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டது குறித்துக் கூறுகையில்,மயக்கமடைந்து விழுந்ததால் அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. கவலைப்படும்படி அவரதுஉடல் நிலை மோசமடையவில்லை என்றார்.
ஐ.ஏ.என்.எஸ்.












Click it and Unblock the Notifications