தமிழகத்தில் இன்று
வேலூர் நர்சுக்கு பிரிட்டிஷ் விருது
சென்னை:
வேலூர் மருத்துவமனையில் பணியாற்றி ஓய்வு பெற்ற நர்ஸ் ஒருவருக்கு பிரிட்டிஷ்அரசு சிறப்பு விருது அளித்து கெளரவித்துள்ளது.
வேலூரில் உள்ள கிறிஸ்துவ மிஷன் மருத்துவமனையில் பணியாற்றிய பெண்மணிஆன் போத்தம்லே. கடந்த 1968ம் ஆண்டு வேலூர் மருத்துவமனைக்கு வருவதற்குமுன்னர் இங்கிலாந்தில் பயிற்சி பெற்றார். வேலூர் கிறிஸ்துவ மிஷன்மருத்துவமனையில் முக்கிய வார்டுகளில் நோயாளிகளைக் கவனிக்கும் பொறுப்புவகித்து வந்தார்.
இங்கிலாந்தில் நிதி பெற்று குழந்தைகள் காப்பகம் ஒன்றையும் வேலூரில் நடத்திவந்தார். இந்த குழந்தைகள் படிப்பிலும் நல்ல தேர்ச்சி பெற்றனர். கடந்த 1998ம்ஆண்டு தனது பணியிலிருந்து ஓய்வு பெற்ற பின்னரும் இந்த குழந்தைகள் விடுதியைதனது பொறுப்பில் நடத்தி வந்தார்.
இவரது பொது நலச் சேவையைப் பாராட்டி இங்கிலாந்து அரசி ராணி எலிசபத் சார்பில்பிரிட்டிஷ் அரசின் உயர்ந்த விருது (most excellent order of the british empire)வழங்கப்படுகிறது.
இதனை பிரிட்டிஷ் அரசிற்கான இந்திய தூதுவர் வேலூரில் அடுத்த வாரம் நடக்கும்விழாவில் வழங்க உள்ளார்.












Click it and Unblock the Notifications