For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தமிழகத்தில் இன்று

By Staff
Google Oneindia Tamil News

பிஜி இடைக்கால அரசில் ஸ்பீட் ஆதரவாளர்களுக்கு "கல்தா"

சுவா:
பிரதமர் லெய்சேனியா கராசே தலைமையில் வெள்ளிக்கிழமை பதவியேற்ற பிஜி இடைக்கால அரசில் புரட்சியாளர் ஜார்ஜ் ஸ்பீட்டின் ஆதரவாளர்கள் யாரும்இடம் பெறவில்லை.

கடந்த 19-ம் தேதி திடீர் புரட்சி நடத்தி அப்போது பிரதமராக இருந்த இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மகேந்திர சவுத்ரி உள்பட பலரை ஜார்ஜ் ஸ்பீட்பிணைக் கைதிகளாகப் பிடித்து வைத்திருந்தார்.

அதன்பிறகு பிஜியில் பல அரசியல் மாற்றங்கள் ஏற்பட்டன. பிணைக் கைதிகள் அனைவரும் விடுவிக்கப்பட்டனர். புதிய இடைக்கால அரசில் தனதுஆதரவாளர்கள் 20 பேர் இடம் பெற வேண்டும் என்று ஜார்ஜ் ஸ்பீட் கூறினார்.

இதையடுத்து ஜோஸெஃபா இலாய்லோ புதிய அதிபராக நியமிக்கப்பட்டார். ஆனால், அவர் அறிவித்த அமைச்சரவைப் பட்டியலில் ஜார்ஜ் ஸ்பீட்டின்ஆதரவாளர்கள் 4 பேர் மட்டுமே இடம் பெற்றனர்.

புதிய அமைச்சரவை பதவியேற்புக்கு ஜார்ஜ் ஸ்பீட் கடும் எதிர்ப்புத் தெரிவித்ததையடுத்து பதவியேற்பு ஒத்திவைக்கப்பட்டது. மேலும், தனது கோரிக்கைகள்ஏற்றுக் கொள்ளப்படாவிட்டால் தனது ஆதரவாளர்கள் நாடு முழுவதும் கிளர்ச்சியில் ஈடுபடுவார்கள் என்றார்.

இந் நிலையில், தொடர்ந்து மிரட்டல் தெரிவித்து வந்த ஜார்ஜ் ஸ்பீட் கடந்த புதன்கிழமை கைது செய்யப்பட்டார். இதைத் தொடர்ந்து புதிய அரசை அதிபர்இலாய்லோ நியமித்தார்.

பிரதமர் கராசே தலைமையில் புதிய அமைச்சரவை வெள்ளிக்கிழமை பதவியேற்றது. இதில் ஜார்ஜ் ஸ்பீட்டின் ஆதரவாளர்கள் ஒருவர் கூட இல்லை.ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட பட்டியலில் இருந்த 4 பேரும் நீக்கப்பட்டனர்.

துணைப் பிரதமராக ராது எபேலி நெய்லடிகாவ் நியமிக்கப்பட்டுள்ளார். புதிய அமைச்சரவை பதவியேற்ற பிறகு பேசிய அதிபர் கராசே, நாட்டில் நிலவும்அமைதியின்மையைப் போக்க பிஜி நாட்டு மக்கள் அனைவரும் ஒற்றுமையுடன் செயல்படவேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X