தமிழகத்தில் இன்று
காஷ்மீர் தீவிரவாதிகளுக்கு ஆதரவு தொடரும் என்கிறார் முஷாரப்
இஸ்லாமாபாத்:
காஷமீர் தீவிரவாதிகளுக்கு பாகிஸ்தானின் ஆதரவு தொடரும் என்று அந் நாட்டின் ராணுவ ஆட்சியாளர் ஜெனரல் பர்வேஸ் முஷாரப் தெரிவித்தார்.
16 நாடுகளைச் சேர்ந்த பாகிஸ்தான் தூதர்களின் 6 நாள் மாநாட்டை அவர் துவக்கி வைத்துப் பேசியதாவது:
காஷ்மீரில் சுதந்திரத்துக்காகப் போராடி வரும் "தீவிரவாதிகளுக்கு" பாகிஸ்தானின் ஆதரவு எப்போதும் உண்டு. காஷ்மீர் பகுதி மக்களுக்குச் சுதந்திரம்கிடைக்க எந்த நடவடிக்கையையும் பாகிஸ்தான் ஆதரிக்கும்.
காஷ்மீருக்குத் தற்போது அமைதியும், பாதுகாப்பும் தேவைப்படுகிறது. தெற்காசியப் பகுதியில் பதற்றமான பகுதியாக காஷ்மீர் தற்போது நிலவுகிறது.காஷ்மீர் பிரச்சினை விரைவில் தீரவேண்டும் என்பதுதான் உலக நாடுகளின் விருப்பம்.
காஷ்மீர் பிரச்சினைக்குத் தீர்வு காணும் நடவடிக்கையில் பாகிஸ்தான் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது என்றார் முஷாராஃப்.
மாநாட்டில் கலந்து கொண்ட காஷ்மீர் வளர்ச்சிக்கான தூதர்களை அவர்கள் மேற்கொண்டுள்ள நடவடிக்கைகளுக்கா முஷாராஃப் பாராட்டுத் தெரிவித்தார்.
மாநாட்டில் கலந்து கொண்ட தூதர்களும், காஷ்மீர் பிரச்சினைக்கு அரசியல் ரீதியிலும், பொருளாதார ரீதியிலும் உலக நாடுகளின் உதவியை பாகிஸ்தான்கேட்டுப் பெறவேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.
யு.என்.ஐ.