தமிழகத்தில் இன்று
மூப்பனார் தலைமையில் அணி அமைந்தால் மகிழ்ச்சியே...ராமதாஸ்
சென்னை:
தமிழ்நாட்டில் அடுத்த சட்டசபைத் தேர்தலில் மூப்பனார் தலைமையில் மூன்றாவது அணி அமைத்தால் அதை வரவேற்போம். ஆனால் அந்த மூன்றாவதுஅணியில் பா.ம.க.சேராது என்றார் ராமதாஸ்.
பாட்டாளி மக்கள் கட்சியின் தொகுதி மாநாடு கோவில்பட்டியில் நடந்தது. இம்மாநாட்டில் கலந்து கொள்ள கோவில்பட்டி வந்திருந்த ராமதாஸ்விருந்தினர் மாளிகையில் நிருபர்களுக்குப் பேட்டியளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:
அடுத்த சட்டசபைத் தேர்தலில் தென்மாவட்டங்களில் பா.ம.க.வுக்கு 25 சதவீத இடங்களைத் தர வேண்டும் என்று கூட்டணிக் கட்சிகளைவற்புறுத்துவோம். அடுத்த தேர்தலிலும் பா.ம.க. திமுக கூட்டணியில் தான் இருக்கும்.
பாண்டிச்சேரியில் வரும் 2001ம் ஆண்டில் பாமக தலைமையிலான கூட்டணி ஆட்சி அமையும். தமிழகத்தில் 2006 ல் கூட்டணி ஆட்சி அமைப்போம்.தமிழகத்திலும் சரி. மத்தியிலும் சரி. இனி எப்போதும் கூட்டணி ஆட்சிதான்.
தற்போது பாமக இதுவரை 102 தொகுதிகளில் மாநாடு நடத்தி விட்டது. மாநாடுகள் முடிந்த பிறகு ஒரே நேரத்தில் 100 கிராமங்களில் பிரச்சாரம்செய்யத் திட்டமிட்டுள்ளோம்.
இதன் முதல் கட்ட நடவடிக்கையாக அடுத்த மாதம் 1ம் தேதி திருவண்ணாமலையில் வந்தவாசி தொகுதியில் ஒரே நாளில் 100 பேச்சாளர்கள், ஆளுக்கொருகிராமத்தில் பேசுவார்கள். இதே போல் எல்லா தொகுதிகளிலும் நடத்தப்படும் என்றார் ராமதாஸ்.