தமிழகத்தில் இன்று
பிரணாய்ராய் வழங்கும் விஜய் செய்திகள்...
சென்னை:
விஜய் டிவிக்காக தமிழில் செய்திகளைத் தயாரித்துக் கொடுக்கவுள்ளது நியுடெல்லி டெலிவிஷன் நிறுவனம் (என்.டி.டிவி).
இது தொடர்பாக இரு நிறுவனங்களுக்கிடையில் ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.
ஒப்பந்தம் குறித்து என்டிடிவி சேர்மன் பிரணாய்ராய் மற்றும் விஜய் டிவி நிர்வாக அதிகாரி ரோஹித் ஆதியா செய்தியாளர்களிடம் கூறுகையில், சென்னையில்அமையும் என்டிடிவியின் நவீன ஸ்டூடியோவில், அதிநவீன கிராபிக்ஸ் சாதனங்கள் இருக்கும்.
இதுதவிர, தமிழகம் முழுவதும் செய்தி மையங்கள் அமைக்கப்படும். இங்கு டிஜிட்டல் கேமிரா, வீடியோ கேமிரா போன்ற வசதிகள் இருக்கும்.
அரைமணி நேரத்திற்கு ஒரு முறை தமிழில் செய்திகள் வழங்கப்படும். தமிழ்நாட்டில் சட்டசபைத் தேர்தல் வரவுள்ள இந்த சமயத்தில் நடுநிலையுடன் கூடிய செய்திகள்வழங்கப்படும்.
விஜய் செய்திகள் என்ற பெயரில் செய்திகள் ஒளிபரப்பாகும். ஆகஸ்ட் 15 முதல் என்டிடிவி செய்திகளை வழங்கும் என்றனர்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications