For Daily Alerts
Just In
தமிழகத்தில் இன்று
விமானம் மலையில் மோதி 5 பேர் பலி
சிம்லா:
ஹிமாச்சல பிரதேச மாநிலம் மண்டி மாவட்டத்தில் டெல்லியிலிருந்து பந்தர் வந்து கொண்டிருந்த விமானம் விபத்துக்குள்ளாகியதில் 5 பேர் இறந்தனர்.
குலு அருகே இந்த விமானம் சனிக்கிழமை பிற்பகல் விபத்துக்குள்ளாகியதாகத் தெரிகிறது. சூப்பர்கிங் ரக விமானமான அது, பிற்பகல் 1.40 மணிஅளவில் பந்தர் விமான நிலையத்தில் இறங்கியிருக்க வேண்டும். ஆனால் அதற்கு முன்னதாகவே, சூங்கி என்ற பகுதியில், மலையில் மோதி சிதறியது.
விமானத்தில், 2 ஊழியர்களும், மூன்று டாக்டர்களும் இருந்தனர். ஏரியல் சர்வீஸஸ் என்ற தனியார் நிறுவனத்திற்குச் சொந்தமானது இது.
மோசமான வானிலை காரணமாக விபத்து நடந்திருக்கலாம் என்று தெரிகிறது. குலு மற்றும் மண்டி பகுதியிலிருந்து மீட்புப் படையினர் விபத்து நடந்தஇடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
யு.என்.ஐ.
Comments
Story first published: Saturday, July 29, 2000, 5:30 [IST]