தமிழகத்தில் இன்று
நியூயார்க்கில் விமானத்தை கடத்த முயற்சி
நியூயார்க்:
நியூயார்க் ஜான் எப். கென்னடி சர்வதேச விமான நிலையத்தில் அமெரிக்க விமானத்தை துப்பாக்கி முனையில்கடத்த முயன்ற நபர் இறுதியில் போலீசாரிடம் சரணடைந்தார்.
கடந்த வியாழக்கிழமை இரவு இந்த சம்பவம் நடந்தது. நேசனல் ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்குச் சொந்தமான அந்தவிமானம் நியூயார்க்கிலிருந்து லாஸ் வேகாசுக்கு புறப்பட இருந்தது. பயணிகள் விமானத்தில் ஏறிக்கொண்டிருந்தபோதே, அதில் துப்பாக்கியுடன் புகுந்த நபர் விமானியையும் துணை விமானியையும் துப்பாக்கியைக்காட்டி மிரட்டி பிணைக் கைதிகளாக்கினார்.
விமானத்தின் கதவுகளை உடனே மூடுமாறு விமான சிப்பந்தியிடம் கூறினார். இதையடுத்து விமானத்தில் ஏறியபயணிகள் உடனடியாக வெளியே ஓடினர். அவர்களை கடத்தல்காரன் ஒன்றும் செய்யவில்லை. அவர்களைவிமானத்திலிருந்து வெளியேற அனுமதித்தான்.
பின்னர் அர்ஜென்டினா நாட்டு தூதரக அதிகாரிகளுடன் தான் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்றும் அதற்குஏற்பாடு செய்தால் தான் விமானிகளை விடுவிப்பேன் என்றும் கூறினான். இதற்கு போலீசார் ஒப்புக் கொள்வதாகக்கூறியதையடுத்து விமானிகளை அவன் விடுவித்தான்.
இதையடுத்து பிற பயணிகளும் பத்திரமான வெளியேறினர். கடத்தல்காரன் குறித்து தகவல் கிடைத்த சிலநிமிடங்களிலேயே விமானத்தை ஸ்வாட் பிரிவு அதிரடிப் படையினர் சுற்றி வளைத்தனர்.
போர்ட் டிரஸ்ட், எப்.பி.ஐ., நியூயார்க் போலீஸ் ஆகிய அமைப்புகளின் அதிகாரிகளும் உடனடியாககடத்தல்காரனுடன் பேச்சுவார்த்தையில் இறங்கினர்.












Click it and Unblock the Notifications