தமிழகத்தில் இன்று
"சிறகு முறிந்த" இந்தியன் ஏர்லைன்ஸை வாங்க முயலும் சிகெரட் நிறுவனம்
கல்கத்தா:
நஷ்டத்தில் தடுமாறி வரும் இந்தியன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தை வாங்க பிரபல சிகரெட் தயாரிப்பு நிறுவனமானஐ.டி.சி. முன் வந்துள்ளது.
ஐ.டி.சியின் 89வது வருடாந்திர பொதுக்குழுக் கூட்டத்துக்குப் பின் அதன் சேர்மன் ஒய்.சி. தேவேஸ்வர் கூறுகையில்,இந்தியன் ஏர்லைன்ஸ் முன் வந்தால் அந்த நிறுவனத்தை ஏற்று நடத்த நாங்கள் தயார். ஆனால், இந்தியன்ஏர்லைன்ஸை ஏற்று நடத்துமாறு இதுவரை எங்களை யாரும் அணுகவில்லை.
பணபலம், ஆள்பலத்தைப் பொறுத்தவரை இந்தியாவின் மிகப் பெரிய நிறுவனம் எங்களுடையது. இதனால்,விமானத்துறையிலும் எங்களால் ஈடுபட முடியும்.
நான் ஏர்-இந்தியாவின் இயக்குனர் குழுவில் இருந்தபோது அந்த நிறுவனத்தை லாபகரமாக இயங்க வைத்தேன்.அந்த அனுபவம் இந்தியன் ஏர்லைன்சையும் லாபகரமாக நடத்த உதவும் என பலரும் கருதுகின்றனர்.
இந்தியன் ஏர்லைன்ஸை வாங்க எங்களுக்கு உதவ பல்வேறு சர்வதேச நிதி நிறுவனங்களும் முன் வந்துள்ளன.அவர்களை காத்திருக்குமாறு கூறியுள்ளேன் என்றார் தேவேஸ்வர்












Click it and Unblock the Notifications