For Daily Alerts
Just In
தமிழகத்தில் இன்று
குணமடைகிறார் ஜோதிபாசு
டெல்லி:
டெல்லியில் நடந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக் கூட்டத்தில் கலந்து கொள்ள வந்தபோது மயக்கமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டமேற்கு வங்க முதல்வர் ஜோதிபாசு தற்போது நலமுடன் இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.
ஜோதிபாசு அனுமதிக்கப்பட்டுள்ள அகில இந்தியமருத்துவ அறிவியல் கழக மருத்துவமனையின் செய்தித் தொடர்பாளர் பி.கே.தாஸ் கூறுகையில், முதல்வர்இப்போது நலமுடன் இருக்கிறார். அவசர சிகிச்சைப் பிரிவிலிருந்து தனி அறைக்கு மாற்றப்பட்டுள்ளார். அவரது நிலையை உன்னிப்பாக கவனித்துவருகிறோம். திங்கள்கிழமை அவர் வீடு திரும்பலாம் என்றார்.
சனிக்கிழமை பிற்பகலுக்கு மேல், குடியரசுத் தலைவர் கே.ஆர்.நாராயணன் வந்து ஜோதிபாசுவைப் பார்க்கலாம் என்றும் தாஸ் தெரிவித்தார்.
ஐ.ஏ.என்.எஸ்.
Comments
Story first published: Saturday, July 29, 2000, 5:30 [IST]