தமிழகத்தில் இன்று
நிபந்தனையற்ற பேச்சுக்கு இந்தியாவை அழைக்கிறது முஜாஹிதின்
இஸ்லாமாபாத்:
காஷ்மீர் பிரச்சனையை முடிவுக்கு கொண்டுவர இந்தியா நிபந்தனையற்றபேச்சுவார்த்தைக்கு வர வேண்டும் என்று ஹிஜ்புல் முஜாஹிதின் தீவிரவாத அமைப்புகூறியுள்ளது.
ஹிஜ்புல் மூஜாஹுதின் அமைப்பு சில நாட்களுக்கு முன்பு காஷ்மீரில் போர்நிறுத்தத்தை அறிவித்திருநத்து. இப்போது, போர் நிறுத்தத்தின் குறிக்கோளே பேச்சுவார்த்தைதான். எனவே இந்தியா நிபந்தனையற்ற பேச்சு வார்த்தை நடத்த வரவேண்டும் எனக் கூறியுள்ளனர்,
அமைப்பின் கமாண்டர் அப்துல் மஜீத் டர் பி.பி.சிக்கு அளித்த பேட்டியில், காஷ்மீரில்உள்ள சூழ்நிலை பேச்சு வார்த்தைக்கு ஏற்றதில்லை என இந்தியா கூறி வந்தது.தற்போது பேச்சுவார்த்தைக்கான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. எனவே இந்தியா பேச்சுவார்க்த்தை நடத்த வர வேண்டும்.
எங்கள் அமைப்பை தீவிரவாத அமைப்பு என்று இந்தியா கூறிவந்தது . நாங்கள்தீவிரவாதிகள் அல்ல என்பதை இந்த உலகுக்கு காட்ட விரும்புகிறோம். நாங்கள்அமைதியையே விரும்புகிறோம் என கூறியுள்ளார்.
காஷ்மீர் மக்களால் ஏற்றுக் கொள்ளக்கூடிய எந்த விதமான நல்ல முடிவையும் நாங்கள்ஏற்றுக் கொள்ள தயாராக இருக்கிறோம். நாங்கள் அதிலிருந்து பின் வாங்க மாட்டோம்.தொடர்ந்து ரத்தம் சிந்துவதையும் நாங்கள் விரும்பவில்லை.
தீவிரவாதிகளுடனான எந்த பேச்சு வார்த்தையும் இந்திய அரசியல் அமைப்புச்சட்டத்திற்கு உட்பட்டே நடத்தப்படும் என இந்தியா கூறியுள்ளது.
இந்தியா இந்த நிலையில் உறுதியாக இருக்குமானால் பேச்சு வார்த்தையில் எந்தவிதமான முன்னேற்பாடும் இருக்காது. இந்தியா நிபந்தனையற்ற பேச்சுவார்த்தைக்குமுன் வர வேண்டும் என டர் கூறியுள்ளார்.
ஐ.ஏ.என்.எஸ்.