தமிழகத்தில் இன்று
ராம்ஜேத்மலானி மீது விசாரணை நடத்த பிரதமர் உத்தரவு
டெல்லி:
அரசின் ரகசிய ஆவணங்களை வெளியிட்டது தொடர்பாக முன்னாள் மத்திய சட்டஅமைச்சர் ராம் ஜேத்மலானி மீது விசாரணை நடத்த பிரதமர் வாஜ்பாய்உத்தரவிட்டுள்ளார்.
விசாரண முடிவில் தெரிய வரும் தகவல்களின் அடிப்படையில் தவறு செய்தவர்கள் மீதுநடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பிரதமர் கூறியுள்ளார்.
லோக் சபாவில் ராம் ஜேத்மலானி விவகாரம் தொடர்பாக எம்.பிக்கள் எழுப்பியகேள்விகளுக்கு அவர் பதிலளிக்கையில், நீதித்துறைக்கும், அரசுக்கும் இடையேமோதல் வலுத்து வருவதையடுத்து ராம் ஜேத்மலானியை ராஜினாமா செய்யச்சொன்னேன்.
ராம் ஜேத்மலானியை ராஜினாமா செய்யச் சொல்வது மிகவும் கடினமாக இருந்தது.நீதிபதிகளின் செயல்பாடுகள் குறித்து லோக் சபாவில் இதுவரைவிவாதிக்கப்பட்டதில்லை. அந்த மரபை நாங்கள் மீற விரும்பவில்லை.
ஜேத்மலானிக்கு அமைதியாக இருப்பது எப்படி என்று தெரியவில்லை. தனக்குச்சம்பந்தம் இல்லாத விஷயங்களில் தலையிட வேண்டாம் என்று பலமுறைஜேத்மலானிக்கு அறிவுறுத்தியுள்ளோம் என்றார் அவர்.