தமிழகத்தில் இன்று
சிறை மாறினார் ஸ்பீட்
சுவா (பிஜி):
பிஜியில் ராணுவ வீரர்களால் கைது செய்யப்பட்ட புரட்சிக்காரர்களின் தலைவர் ஜார்ஜ்ஸ்பீட் அவரது ஆதரவாளர்கள் உட்ளிட்ட ஏழுபேரும் பிஜியில் உள்ள சிறிய தீவில்சிறை வைக்கப்பட்டுள்ளனர்.
கைதாகியுள்ளவர்களில் ஸ்பீட்டின் செய்தித் தொடர்பாளர் ஜோ நாடாவும்அடங்குவார். அனைவரும் தற்போது நுகுலாவ் என்ற தீவில் சிறைவைக்கப்பட்டுள்ளனர் என ராணுவ அறிக்கை தெரிவிக்கிறது. முன்னதாக அனை வரும்சுவாவில் சிறை வைக்கப்பட்டிருந்தனர்.
ராணுவ செயதித் தொடர்பாளர் இதுகுறித்துத் தெரிவிக்கையில் கைதுசெய்யப்பட்டவர்கள் சுவாவிலிருந்து தப்பி விடுவார்கள் என்பதற்காக சிறை மாற்றம்செய்யப்படவில்லை. அவர்களின் பாதுகாப்புக்காகத்தான் அவர்கள் வேறு சிறைக்குமாற்றப்பட்டுள்ளனர் என்றார்.
நுகுலாவ் தீவும் அதற்கு அருகிலுள்ள மகுலாவ் தீவும் பிஜியில் உல்லாசப் பயணத்திற்குஉகந்த இடமாக கருதப்பட்டு வந்தது. அதை சம்பிரதாயப்படியான சிறைப்பகுதியாகமாற்றுவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக ராணுவ அதிகாரி லெப்டினன்ட்அலிபேட் முக்டாய்டினி தெரிவித்தார். எத்தனை வீரர்கள் சிறையில் காவலுக்குஉள்ளனர் என கூற அவர் மறுத்துவிட்டார்.












Click it and Unblock the Notifications