தமிழகத்தில் இன்று
தேயிலை விவசாயிகளுக்கு ஆதரவாக களம் இறங்குகிறது அதிமுக
சென்னை:
நீலகிரி மாவட்டத் தேயிலை விவசாயிகள் பிரச்னைக்கு தீர்வு காணவில்லையென்றால்,அ.தி.மு.க போராட்டத்தில் குதிக்கும் என அதன் பொதுச் செயலர் ஜெயலலிதாதெரிவித்துள்ளார்.
சென்னையில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், நீலகிரி மாவட்டத்தில்விவசாயிகளின் பிரச்னையைத் தீர்க்க கோரியும், தொழிலாளர்களுக்கு ஆதரவாகவும் வரும்ஜூலை 31ம் தேதி அ.தி.மு.க அவைத் தலைவர் காளித்து தலைமையில் ஊட்டியில்ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்.
நீலகிரியில் அமைதியான முறையில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டவிவசாயிகள் மீது கண்ணீர் புகை குண்டு வீச்சு மற்றும் தடியடி நடந்துள்ளது. இதில் 3 பேர்ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிய வந்துள்ளது. தடியடியில்காயமடைந்தவர்களுக்கு அரசு உரிய நிவாரணம் அளிக்க வேண்டும்.
சாலை மறியலில் ஈடுபட்ட பெண்கள் உட்பட சிலர் மீது போலீசார் துப்பாக்கிச் சூடுநடத்தியுள்ளனர்.மேலும், எல்லநள்ளி, எடக்காடு, கைகட்டி, மஞ்சக்கொம்பை, எடப்பள்ளி,பெங்கால்மட்டம், ஆகிய கிராமங்களில் போலீசார் வீடு வீடாகச் சென்று விவசாயிகளைவலுக்கட்டாயமாக இழுத்து வந்து கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட 500க்கும் மேற்பட்டோர் வேலூர் மற்றும் சேலம் சிறைகளில்அடைக்கப்பட்டுள்ளனர் எனத் தெரிய வந்துள்ளது.
கடந்த சில நாட்களாக நீலகிரியில் போக்குவரத்து பெரிதும் பாதிப்படைந்துள்ளது. பலகிராமங்களுக்கு பஸ் விடாமல் நிறுத்தப்பட்டுள்ளது.
பச்சைத் தேயிலை விலை வீழ்ச்சிக்கு காரணம், கருணாநிதியின் எதிர்ப்பையும் மீறி,முரசொலி மாறன் இறக்குமதி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது தான்.
இது தவிர, இலங்கையிலிருந்து வந்த அகதிகள், வேலை செய்ததற்கான கூலியை தமிழ்நாடுதேயிலைக் கழகம் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக நிறுத்தி வைத்துள்ளது. இதனைஉடனடியாக வழங்க வேண்டும் என கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications