தமிழகத்தில் இன்று
ரூ. 5 கோடியில் ஒரு டென்னிஸ் கிராமம்
பெங்களூர்:
பெங்களூர் அருகே ரூ. 5 கோடி மதிப்பில் அதி நவீன வசதிகள் கொண்ட டென்னிஸ் கிராமம் உருவாகியுள்ளது.
இந்தியாவின் நம்பர் டூ டென்னிஸ் வீரரான மகேஷ் பூபதியின் தந்தை, சி.ஜி.கிருஷ்ண பூபதி இந்த டென்னிஸ் கிராமத்தை நிறுவியுள்ளார்.
பெங்களூர் புறநகரான எலஹங்காவில் இந்த நவீன டென்னிஸ் கிராமம் அமைந்துள்ளது.
டிசம்பர் 11-ம் தேதி ஏ.டி.பி. உலக இரட்டையர் டென்னிஸ் போட்டிகள் இந்த டென்னிஸ் கிராமத்தில்தான் நடைபெறவுள்ளது. அதன் பிறகு இக்கிராமம்உலகப் புகழ் பெறும் - மகேஷ் பூபதியைப் போல.
போட்டியின் இயக்குநராக அறிவிக்கப்பட்டுள்ள கிருஷ்ண பூபதி கூறுகையில், ஆசியாவில் மட்டுமல்லாது, உலகிலேயே மிகச் சிறந்த டென்னிஸ் கிராமமாகஇதை மாற்ற முடிவு செய்துள்ளோம்.
தற்போதுள்ள டென்னிஸ் கிராமத்திற்கு அருகிலேயே மேலும் இடம் வாங்கியுள்ளோம். எதிர்காலத்தில் இந்தக் கிராமத்தில் 11 கோர்ட்டுகள்அமையும் வகையில் விரிவாக்கம் செய்யத் திட்டமிட்டுள்ளோம்.
டென்னிஸ் கிராமத்தில் நீச்சல் குளம் உள்பட அனைத்து வசதிகளும் இருக்கும். பயிற்சிக்கான வசதிகளும் சிறப்பாக செய்யப்பட்டுள்ளன என்றார் கிருஷ்ணபூபதி.