தமிழகத்தில் இன்று
அரசியல் சட்டத் திருத்தத்திற்கு ஆதரவு திரட்டுகிறார் சந்திரிகா
கொழும்பு:
புதிய அரசியல் சட்டத் திருத்தத்திற்கு ஆதரவு திரட்டுவதில் இலங்கை அதிபர் சந்திரிகா தீவிரமாக இறங்கியுள்ளார்.
கண் சிகிச்சைக்காக லண்டன் சென்றிருந்த சந்திரிகா சனிக்கிழமை கொழும்பு திரும்பினார். புதிய அரசியல் சட்டத்திற்கு ஆதரவு அளிக்க முக்கியஎதிர்க்கட்சியான ஐக்கிய தேசியகட்சி மறுப்புத் தெரிவித்து விட்டது. இந்த நிலையில் நாடாளுமன்றத்தில் அரசியல் சட்டதிருத்த மசோதாவைநிறைவேற்றுவதில் முட்டுக்கட்டை ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் மசோதாவிற்குப் பிற கட்சிகளின் ஆதரவைத் திரட்டும் பணியில் முழு மூச்சாக ஈடுபட்டுள்ளார் அதிபர் சந்திரிகா. தமிழர் கட்சிகளுடன்மீண்டும் பேச்சுவார்த்தையில் இறங்கியுள்ளார். தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி, தமிழ் ஈழ மக்கள் விடுதலை இயக்கம் உள்பட பல்வேறு தமிழர் கட்சித்தலைவர்கள் சனிக்கிழமை அதிபர் சந்திரிகாவுடன் பேச்சு நடத்தினர். மீண்டும் திங்கள்கிழமை பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர்.
புதிய அரசியல் சட்ட திருத்த மசோதா ஆகஸ்ட் 3 ம் தேதி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட உள்ளதால் அனைத்து எம்பிக்களின் ஆதரவைதிரட்டவும் சந்திரிகா முடிவு செய்துள்ளார். இலங்கை நாடாளுமன்றத்தில், மொத்தம் 225 எம்பிக்கள் உள்ளனர். ஆளும் கட்சி கூட்டணிக்கு 150எம்பிக்கள் உள்ளனர். தமிழ் கட்சிகளில் 26 எம்பிக்களும் உள்ளனர்.
மசோதா நிறைவேற குறைந்தது மூன்றில் இரண்டு பங்கு எம்பிக்களின் ஆதரவு வேண்டும். சட்ட மசோதாவை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றுவதுகுறித்து அதிபர் சந்திரிகா மிகவும் நம்பிக்கையுடன் உள்ளார் என தமிழ் ஈழ மக்கள் விடுதலை அமைப்புத் தலைவர் சித்தார்த்தன் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications