தமிழகத்தில் இன்று
Subscribe to Oneindia Tamil
அரசு பள்ளிச் சுவர் இடிந்து விழுந்ததில் மாணவி பலி
கோவை:
அரசு பள்ளிச் சுவர் இடிந்து விழுந்ததில் பள்ளிச் சிறுமி பலியானார்.
கோவை அருகே உள்ள உஜ்ஜையனூரில் அரசு ஊராட்சித் தொடக்கப்பள்ளி உள்ளது.
இங்கு 186 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். ஜூலை 28ம் தேதி மாலை இடைவேளையின் போது மாணவிகள், கேட் அருகே விளையாடிக்கொண்டிருந்தனர்.
அப்போது எதிர்பாராத விதமாக பள்ளிச் சுவர் இடிந்து விழுந்துது. இதில், ரம்யா (7)என்ற மாணவி, இடிபாடுகளில் சிக்கி இறந்தார். பவித்ரா (7),வள்ளி (7) ஆகிய சிறுமிகள் இடிபாடுகளில் சிக்கி, காயமடைந்தனர்.
இவர்கள் இருவரும் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இது தொடர்பாக போலீசார் வழக்குப் பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications