தமிழகத்தில் இன்று
ஆன்லைன் மூலம் புகையிலை விற்க ஐ.டி.சி திட்டம்
டெல்லி:
ஆன்லைன் மூலம் புகையிலை விற்க ஐ.டி.சி நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
இதன் முதல் கட்டமாக ஆந்திரா, கர்நாடகம், மத்தியப்பிரதேசம் ஆகிய மூன்று மாநிலங்களிலுள்ள 1000 கிராமங்களை இணைக்கும் வகையில் ஈ-ஹப்ஸ்என்ற இன்டர்நெட் சேவையை அளிக்க ஐடிசி நடவடிக்கைகள் எடுத்து வருகிறது.
இந்த நெட் சேவை மூலம் ஆன்லைனில் பொதுமக்கள், மற்றும் விவசாயிகள் ,புகையிலை, புகையிலை பொருட்கள், காபி போன்ற பொருட்களைப்பெற்றுக் கொள்ளலாம்.
ஐ.டி.சி நிறுவனத்தின் வியாபார பிரிவு ஏற்கனவே மத்தியப் பிரதேசத்தில் ஆன்லைன் மூலம் சோயாபீன்ஸ் வகைகளைப் பெற்றுக்கொள்ளும் வகையில்வியாபாரத்தைத் தொடங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
சோயா சோப் பால் என்ற சேவைப் பிரிவு மூலம் சோயாபீன்ஸ் விவசாயிகள், வானிலை, சோயா பீன்ஸ்க்கு சந்தையில் உள்ள விலை, இதைப் பயிரிடுவதற்குத்தேவையான உர வகைகள் போன்றவற்றைத் தெரிந்து கொள்ளலாம்.