தமிழகத்தில் இன்று
ஆஸ்திரேலியாவில் மகேந்திர செளத்ரி
மெல்போர்ன்:
ஆஸ்திரேலிய தலைவர்களுடன் ஆலோசனை நடத்தவும்,மருத்துவப் பரிசோதனை செய்து கொள்ளும் பொருட்டும், பிஜி முன்னாள் பிரதமர் மகேந்திர செளத்ரி,ஆஸ்திரேலியாவின் சிட்னி நகருக்குச் சென்றுள்ளார்.
இத்தகவலை ஆஸ்திரேலிய பிரதமர் ஜான் ஹோவர்ட், ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். செளத்ரியுடன், அவரது மனைவி, மகன்ஆகியோரும் வந்துள்ளனர். ஆஸ்திரேலிய அரசின் விருந்தினர்களாக அவர்கள் வந்துள்ளதாகவும் ஹோவர்ட் தெரிவித்ததாக ஆஸ்திரேலிய ரேடியோதெரிவித்தது.
ஹோவர்ட்டும், செளத்ரியும், திங்கள்கிழமை சந்தித்துப் பிஜி நிலவரம் குறித்துப் பேசுவர். பிஜித் தீவில் நடந்து வரும் நிலை குறித்த தனது அதிருப்தியை மீண்டும்ஒருமுறை வெளிப்படுத்த இந்த சந்திப்பை ஆஸ்திரேலியா பயன்படுத்திக் கொள்ளும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மே 19-ம் தேதி ஜார்ஜ் ஸ்பீட் தலைமையிலான புரட்சியாளர்களால் செளத்ரி புரட்சி மூலம் பதவி நீக்கம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
ஐ.ஏ.என்.எஸ்.












Click it and Unblock the Notifications