For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தமிழகத்தில் இன்று

By Staff
Google Oneindia Tamil News

சனிப்பெயர்ச்சி...திருநள்ளாருக்கு சிறப்பு ரயில்கள்

திருச்சி:

சனிப்பெயர்ச்சி விழாவை முன்னிட்டு திருநள்ளாறுக்கு, கோவையிலிருந்து ஈரோடு, கரூர் வழியாக சிறப்பு சிறப்புரயில்கள் இயக்கப்படுகின்றன.

ஆகஸ்ட் 3 ம் தேதி திருநள்ளாறு நகரில் சனிப்பெயர்ச்சி விழா நடக்கிறது. இவ்விழாவில் கலந்து கொள்வதற்காகஇந்தியா முழுவதிலும் இருந்து ஏராளமான பக்தர்களுக்குப் பயன்படும் வகையில் ரயில்களுக்கும், பஸ்களுக்கும்ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக தெற்கு ரயில்வே திருச்சி கோட்ட மேலாளர் பட்டாச்சார்யா வெளியிட்ட அறிக்கை: சனிப்பெயர்ச்சிவிழாவையொட்டி முக்கிய நகரங்களுக்கு தெற்கு ரயில்வே சிறப்பு ரயில்களை இயக்க முடிவு செய்துள்ளது.

திருநள்ளாறில் ஆகஸ்ட் 2 ம் தேதி நடக்கும் சனிப்பெயர்ச்சி விழாவில் பக்தர்கள் கலந்துகொள்வதற்காக இரவு11.30 மணிக்கு கோவையிலிருந்து புறப்படும் ரயில் திருப்பூர், ஈரோடு, கரூர், வழியாக மறுநாள் காலையில்திருச்சியை வந்தடையும். இதே போல் வரும் 4ம் தேதி காலை 4.30 மணிக்கு திருச்சியில் புறப்படும் இந்த சிறப்புரயில் கரூர், ஈரோடு, திருப்பூர் மார்க்கமாக மறுநாள் காலை கோவையை வந்தடையும்.

இதேபோல் திருச்சியிலிருந்து தஞ்சை, திருவாரூர், நாகை வழியாக நாகூருக்கும் சிறப்பு ரயில்கள்இயக்கப்படுகின்றன.

மேலும் சென்னை தாம்பரத்திலிருந்து, செங்கல்பட்டு, திண்டிவனம், விழுப்புரம், கடலூர் துறைமுக ஜங்ஷன்வழியாக மயிலாடுதுறைக்கு ஒரு சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது என்று அறிக்கை வெளியிட்டுள்ளது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X