For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

400 விக்கெட்டுகளை வீழ்த்தினார் ஆம்புரோஸ்

By Staff
Google Oneindia Tamil News

நாஞ்சிலார் மறைவுக்கு தலைவர்கள் இரங்கல்

சென்னை:

தமிழக வருவாய்த்துறை அமைச்சர் நாஞ்சில் கி. மனோகரனின் மறைவுக்கு பிரதமர் உள்பட பல்வேறு கட்சிகளின் தலைவர்களும் இரங்கல்தெரிவித்துள்ளனர்.

பிரதமர் வாஜ்பாய்:

நாஞ்சில் மனோகரன் மறைவை அடுத்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். நாஞ்சில்மனோகரன் நாடாளுமன்றத்தில் நீண்ட நாள் என்னுடன் சேர்ந்து செயல்பட்டவர். சிறந்த நாடாளுமன்றவாதி. அவரது மறைவால் வாடும் திமுகதலைவர் கருணாநிதிக்கு எனது ஆழ்ந்த வருத்தத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

ஆளுநர் பாத்திமா பீவி:

நாஞ்சில் மனோகரனை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், திமுக தலைவர் கருணாநிதிக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன். அவர் ஒரு சிறந்த நிர்வாகி. சிறந்த நாடாளுமன்றவாதி.

அமைச்சர் க. அன்பழகன்:

நாஞ்சில் மனோகரன் மறைவு செய்தி கேட்டு அதிர்ச்சியுற்றேன். அனைவரிடமும் அன்பாகப் பேசி அவர்களின் அன்பைப் பெற்றவர். மற்ற கட்சியினரிடமும்நட்புடன் உறவாடி அவர்களின் பாராட்டுக்கு உரியவராக விளங்கினார்.

இளம் வயதிலேயே நாடாளுமன்ற உறுப்பினராகி அனைத்துக் கட்சி தலைவர்களிடம் நெருக்கமான தொடர்பை வைத்துக் கொண்டார்.

தனது இனிய குரலால் தமிழ் மக்களைக் கவர்ந்தவர். திமுகழகத்தின் முன்னணி தலைவராகவும், பெருந் தூணாகவும் விளங்கியவர். அவரது மறைவுதிமுகவுக்குப் பெரிய இழப்பு.

அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு எனது இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

வைகோ:

திராவிட இயக்கத்துக்கு நாஞ்சில் நாடு தந்த மணி விளக்கு அணைந்துவிட்டது. தனக்கென ஒரு பாணியை வகுத்துக் கொண்டு சிறந்த சொற்பொழிவாளராகவிளங்கியவர். அனைத்துக் கட்சித் தலைவர்களின் நன் மதிப்பைப் பெற்றவர். நட்புக்கு இலக்கணமானவர்.

அவரது மறைவு திமுகவுக்கும், தமிழகத்துக்கும் பெரும் இழப்பாகும். அவரது குடும்பத்தினருக்கு என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X