400 விக்கெட்டுகளை வீழ்த்தினார் ஆம்புரோஸ்
வீரப்பனிடம் தூது செல்ல முன் வரும் முன்னாள் பிணைக் கைதி
கோவை:
வீரப்பனிடம் ஒரு மாதம் பணயக் கைதியாக இருந்தவர் தூது செல்லத் தயார் எனஅறிவித்துள்ளார்.
கோவையை அடுத்துள்ள நரசிம்ம நாயக்கன் பாளையத்தைச் சேர்ந்தவர் சேகர்ராஜூ.இவர் ஆசிரியராகப் பணியாற்றி வருகின்றார். இவர் நிருபர்களிடம் கூறியதாவது:
வீரப்பன் ஒரு நாளைக்கு 30 கிலோ மீட்டர் தூரம் பயணம் செய்வான். பணயக்கைதிகளால் நடக்க முடியவில்லையென்றால், அவர்களை அவனதுஆட்களைக்கொண்டு சுமந்து வரும்படி கூறுவான். அவனது உத்தரவுப் படி அவனது ஆட்கள்பணயக் கைதிகளைத் தூக்கி செல்வதுண்டு.
பொதுவாக தனக்கு சாதகமான சூழ்நிலை ஏற்படும் போது மட்டுமே கடத்தல்நாடகத்தை அரங்கேற்றுவான். மழைக் காலங்களில் மழை வந்தால் பிளாஸ்டிக்பைகளைக் கொண்டு கூடாரம் அமைத்து தங்குவான்.
பணயக் கைதிகள் தப்பால் இருக்க, காவலாளிகளை போலீஸ் உடையில் இருக்கவைப்பான். அவனிடம் ஒரு டேப்ரெக்கார்டர் டூ இன் ஒன் உண்டு. இதில் தவறாமல்பி.பி.சி செய்தி கேட்பான். காலை மாலை இரண்டு வேளைகள் மட்டுமே சாப்பிட்டுபழகிய வீரப்பன், தனது கைதிகளுக்கும் தான் உண்பதையே உணவாகக் கொடுப்பான்.
தற்போது வீரப்பனுக்கு பணத் தேவை இல்லை. அவன் கோரிக்கை வைத்தால் பொதுமன்னிப்பு வழங்கத்தான் கூறுவான். ஒரு மாதம் அவனுடன் தங்கியிருந்ததால்,அவனைப் பற்றியும் அவனது கூட்டாளிகளைப் பற்றியும் நன்கு தெரியும்.
எனவே, அரசு என்னை தூதுவராக செல்ல அழைத்தால் செல்லத் தயாராகஇருக்கிறேன். வீரப்பனிடம் தூது செல்வேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
கடந்த 94ம் ஆண்டு போலீஸ் டி.எஸ்.பி.,சிதம்பரநாதன், ஏட்டு ராஜகோபால்ஆகியோர் கடத்தப்பட்டபோது சேகர் ராஜூவும் கடத்தப்பட்டார். இவர் தற்போதுஆசிரியராக நரசிம்மநாயக்கன்பாளையத்தில் பணியாற்றி வருகிறார்.