400 விக்கெட்டுகளை வீழ்த்தினார் ஆம்புரோஸ்
அமைச்சர் நாஞ்சில் மனோகரன் மரணம்: புதன்கிழமை உடல் தகனம்
சென்னை:
மாரடைப்பால் காலமான தமிழக வருவாய்த் துறை அமைச்சர் நாஞ்சில் கி.மனோகரனின் உடல் புதன்கிழமை தகனம் செய்யப்படகிறது.
ஓட்டேரியில் உள்ள சுடுகாட்டில் காலை 9 மணிக்கு நாஞ்சிலாரின் உடல் தகனம்செய்யப்படுகிறது.
திங்கள்கிழமை இரவு வீட்டில் இருந்தபோது நாஞ்சில் மனோகரனுக்கு திடீர்நெஞ்சு வலி ஏற்பட்டது. உடனே அவர் அப்பல்லோ மருத்துவமனையில்சேர்க்கப்பட்டார். அங்கு செவ்வாய்க்கிழமை அதிகாலை அவர் இறந்தார்.
புரசைவாக்கத்தில் உள்ள வீட்டில் பொதுமக்கள் அஞ்சலிக்காக மனோகரனின்உடல் வைக்கப்பட்டது. செவ்வாய்க்கிழமை காலை 10.30 மணி அளவில்மனோகரன் வீட்டுக்குச் சென்ற தல்வர் கருணாநதி, மனோகரன் உடல் மீதுமலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.
அமைச்சர்கள் அன்பழகன், ஆர்க்காடு வீராசாமி உள்ளிட்ட அனைத்துஅமைச்சர்களும், மேயர் .க.ஸ்டாலின், சட்டப்பேரவை உறுப்பினர்கள், திமுகநிர்வாகிகள், மாவட்டச் செயலாளர்கள், நடிகர்கள், நடிகைகள், பிற கட்சித்தலைவர்கள் உள்ளிட்டோரும் மனோகரன் வீட்டுக்குச் சென்று அவரது உடலுக்குஅஞ்சலி செலுத்தினர்.
பொதுமக்களும் நீண்ட வரிசையில் நின்று மறைந்த தலைவரின் உடலுக்கு அஞ்சலிசெலுத்தினர். அமைச்சர் மறைவையொட்டி, அவரது வீடு இருக்கும் புரசைவாக்கம்,ஓட்டேரி பகுதிகளில் உள்ள பள்ளிகளுக்கு விடுறை அறிவிக்கப்பட்டது.
அமைச்சரின் தம்பி மஸ்கட்டில் உள்ளார். அவருக்குத் தகவல்தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர் வந்ததும் புதன்கிழமை காலை நாஞ்சிலாரின் உடல்தகனம் செய்யப்படும்.
தி.மு.க. 3 நாள் துக்கம்:
நாஞ்சில் மனோகரன் மறைவை அடுத்து திராவிட முன்னேற்றக் கழகம் 3 நாள்துக்கம் கடைப்பிடிக்கிறது. ஆகஸ்ட் 1,2,3 தேதிகளில் திமுக கொடிகள் அனைத்தும்அரைக் கம்பத்தில் பறக்கும்.
இந்த மூன்று நிாட்களில் எந்த கழக நிகழ்ச்சிகளும் நடைபெறாது என்றும்,ஏற்கெனவே திட்டமிடப்பட்ட நிகழ்ச்சிகள் அனைத்தும் ரத்து செய்யப்படுவதாகவும்திமுக தலைமைக் கழகம் அறிவித்துள்ளது.
முதல்வரின் நிகழ்ச்சிகள் ரத்து:
நாஞ்சில் மனோகரன் மறைவை அடுத்து கோவை, சேலம் மாவட்டங்களில்முதல்வர் கருணாநிதி கலந்து கொள்வதாக இருந்த நிகழ்ச்சிகள் அனைத்தும் ரத்துசெய்யப்பட்டுவிட்டன.
அமைச்சர் நாஞ்சிலார் மறைந்ததை அடுத்து அரசு அலுவகங்களுக்கு செவ்வாய்க்கிழமை அரைநாள் விடுறை அறிவிக்கப்பட்டது. அரசுஅலுவலகங்களில் தேசியக் கொடிகள் அரைக் கம்பத்தில் பறக்கவிடப்பட்டன.