400 விக்கெட்டுகளை வீழ்த்தினார் ஆம்புரோஸ்
இது ஆபத்தான சந்திப்பாக இருக்கும் என்கிறார் நக்கீரன் கோபால்
சென்னை:
கன்னட நடிகர் ராஜ்குமார் உள்பட 4 பேரைக் கடத்திச் சென்றுள்ள சந்தனக் கடத்தல் வீரப்பனைச் சந்திக்க செல்லஇருப்பதாக நக்கீரன் கோபால் தெரிவித்தார்.
தமிழகத்தில் ஈரோடு மாவட்டத்தில் காஜனூரில் உள்ள தனது பண்ணை வீட்டுக்கு வந்திருந்த ராஜ்குமாரையும்அவரது உறவினர், மானேஜர், மருமகன் ஆகியோரையும் சந்தனக் கடத்தல் வீரப்பன் துப்பாக்கி முனையில்ஞாயிற்றுக்கிழமை இரவு கடத்திச் சென்றான்.
ராஜ்குமாரின் மனைவி பர்வதம்மாவிடம் ஒரு கேஸட் கொடுத்து அதை கர்நாடக முதல்வர் எஸ்.எம்.கிருஷ்ணாவிடம் ஒப்படைக்கும்படி வீரப்பன் கூறிவிட்டுச் சென்றுவிட்டான்.
அந்த கேஸட்டில் 8 நாட்களுக்கு தன்னைச் சந்திக்க ஒரு தூதரை அனுப்பும்படி வீரப்பன் கூறியிருந்தான்.
இது தொடர்பாக கர்நாடக முதல்வர் எஸ்.எம். கிருஷ்ணாவும், தமிழக முதல்வர், கருணாநிதியும் சந்தித்துப் பேசினர்.வீரப்பனைச் சந்திக்க நக்கீரன் கோபாலை மீண்டும் அனுப்பலாமா என்று ஆலோசிக்கப்பட்டது.
இது குறித்து நக்கீரன் கோபாலிடம் முதல்வர் கருணாநிதி பேசினார். கருணாநிதியின் வேண்டுகோளை ஏற்றுவீரப்பனைச் சந்திக்க நக்கீரன் கோபால் சம்மதம் தெரிவித்தார்.
அதன்படி செவ்வாய்க்கிழமை அவர் காட்டுக்கு செல்ல இருந்தார். ஆனால், பெரம்பலூரில் நக்கீரன் நிருபர் ஒருவர்கொலை செய்யப்பட்டதையடுத்து புதன்கிழமை அல்லது அதற்குப் பின் வீரப்பனைச் சந்திக்க நக்கீரன் கோபால்செல்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழக மற்றும் கர்நாடக மாநிலங்கள் சார்பில் அரசுத் தூதராக நக்கீரன் கோபால் செல்கிறார்.
வீரப்பனைச் சந்திக்கும் முன் முதல்வர் கருணாநிதியைச் சந்திக்க இருப்பதாக கோபால் கூறினார். பலமுறைஉயிரைப் பணயம் வைத்து வீரப்பனைச் சந்தித்திருக்கிறேன். வீரப்பனிடமிருந்து பிணைக் கைதிகளை விடுவித்துவந்துள்ளேன்.
ஆனால், இந்த முறை செல்வது ஆபத்தானதாக இருக்கும் என்று கருதுகிறேன். ஆகவே இரு மாநிலஅரசுகளிடமிருந்து சில உறுதிமொழிகளை எதிர்பார்க்கிறேன். அது குறித்து முதல்வர் கருணாநிதியுடன் பேசுவேன்.
இப்போது நான் மேற்கொள்ளும் பயணம் வெற்றிகரமாக முடியும் என்று கருதுகிறேன். தற்போது வீரப்பன்இருக்கும் இடம் எனக்குத் தெரியாது. நான் கடைசியாக வீரப்பனைச் சந்தித்து 3 ஆண்டுகள் ஆகிவிட்டது.வீரப்பனிடமிருந்து வரும் தகவலைப் பொறுத்துத்தான் காட்டுக்குள் செல்ல முடியும்.
என்னுடன் எனது அலுவலக நண்பர்கள் சிவசுப்பிரமணியம், சுப்பு, பாலு ஆகியோரும் வீரப்பனைச் சந்திக்கவருகின்றனர் என்றார் கோபால்.












Click it and Unblock the Notifications