400 விக்கெட்டுகளை வீழ்த்தினார் ஆம்புரோஸ்
வீரப்பனுடன் பேச்சுவார்த்தைக்கு ரஜினிகாந்த் தயார்?
பெங்களூர்:
நடிகர் ராஜ்குமாரை விடுவிப்பதற்காதக வீரப்பனுடன் பேச்சுவார்த்தை நடத்தகாட்டுக்குள் செல்லத் தயாராக இருப்பதாக ரஜினி காந்தும், கன்னட நடிகர் அம்பரீஷ்,நடிகை ஜெயப்பிரதா ஆகியோர் கூறியுள்ளனர்.
வீரப்பனுடன் எந்தவித பேச்சுவார்த்தைக்கும் தயாராக இருப்பதாக அவர்கள்அறிவித்துள்ளனர்.
பெங்களூரில் நிருபர்களிடம் பேசிய அம்பரீசும் ஜெயப்பிரதாவும் இதனைத்தெரிவித்தனர். தன்னுடன் ரஜினியும் வரத் தயாராக இருப்பதாகவும் அம்பரீஷ்கூறினார்.
வீரப்பனுக்கு கர்நாடக அரசு கடிதம்:
இதற்கிடையே வீரப்பனுக்கு அனைத்து பாதுகாப்பும் அளிக்கப்படும் என்றுஉறுதியளிக்கும் கடிதத்தை கர்நாடக அரசு நக்கீரன் ஆசிரியர் கோபாலிடம்வழங்கியுள்ளது.
அதில் நடிகர் ராஜ்குமாரை உடனே விடுவிக்குமாறும் அதற்கு பிரதிபலனாக கர்நாடகஅரசு உங்களுக்கு (வீரப்பனுக்கு) முழு பாதுகாப்பும் வழங்கும் எனவும்கூறப்பட்டுள்ளது.
வீரப்பனிடம் வழங்குவதற்காக ஒரு கடிதத்தை வழங்குமாறு கர்நாடக அரசிடம்கோபால் கேட்டுக் கொண்டதையடுத்து உடனடியாக இந்த கடிதம் தரப்பட்டதாகமுதல்வர் கிருஷ்ணா நிருபர்களிடம் கூறினார்.