400 விக்கெட்டுகளை வீழ்த்தினார் ஆம்புரோஸ்
தமிழர்களைத் தாக்க வேண்டாம்...ரஜினி கோரிக்கை
சென்னை:
நடிகர் ராஜ்குமார் கடத்தல் காரணமாக ஆத்திரமடைந்துள்ள அவரது ரசிகர்கள் பெங்களூர்உள்ளிட்ட கர்நாடகத்தின் பல்வேறு பகுதிகளில் வாழும் தமிழர்களைத் தாக்க வேண்டாம்என்று நடிகர் ரஜினி காந்த் கோரிக்கை விடுத்துள்ளார்.
ராஜ்குமார் கடத்தல் காரணமாக பெங்களூர்உள்ளிட்ட கர்நாடகத்தின் பல்வேறு பகுதிகளில்வன்முறை, கலவரம் வெடித்துள்ளது. தமிழர்களும்,தமிழ்நாடு சம்பந்தப்பட்டவாகனங்களும் தாக்குதலுக்குள்ளாகியுள்ளனர்.
தமிழ்நாடு பதிவு எண் கொண்ட வாகனங்கள் எரிக்கப்பட்டுள்ளன. பெங்களூர் முழுவதும்வன்முறையால் பாதிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, ராஜ்குமாரின் ரசிகர் மன்றத்தலைவருக்குப் போன் செய்த நடிகர் ரஜினிகாந்த், கர்நாடகத்தில் வாழும் தமிழர்களைத்தாக்க வேண்டாம். அவர்களுக்குப் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
இதையடுத்து ராஜ்குமாரின் மனைவி பர்வதம்மாவும், ரசிகர் மன்றத் தலைவரும்,தமிழர்களை தாக்க வேண்டாம் என்று பெங்களூரில் அறிக்கை விட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications