400 விக்கெட்டுகளை வீழ்த்தினார் ஆம்புரோஸ்

Subscribe to Oneindia Tamil

அதிரடிப்படை தேடுதல் வேட்டை நிறுத்தம்

பெங்களூர்:

வீரப்பனை சந்திக்க தூதர் வரவிருப்பதையடுத்து அதற்கு வசதியாக இரு மாநிலஅதிரடிப்படை வீரர்களும் தங்களது தேடுதல் வேட்டையை நிறுத்தியுள்ளனர்.

கன்னட நடிகர் ராஜ்குமாரை, வீரப்பன் மற்றும் அவனது கும்பல் கடத்திச் சென்றுள்ளது.ராஜ்குமாரை பத்திரமாக மீட்பது குறித்து வீரப்பனுடன் பேசுவதற்காக நக்கீரன் ஆசிரியர்கோபால், காட்டுக்குச் செல்லவுள்ளார்.

இதையடுத்து கோபால் காட்டுப் பகுதிக்குச் செல்வதற்கு வசதியாக அதிரடிப் படையின்தேடுதல் நடவடிக்கைகள் நிறுத்தப்படுவதாக தமிழகம் மற்றும் கர்நாடக அரசுகள்அறிவித்துள்ளன.

இந்த நிலையில், ராஜ்குமாரை விடுவிக்க வேண்டுமானால், கர்நாடகத்தில் தடாசட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள தமிழர்களை, உடனடியாக விடுவிக்கவேண்டும் என்று வீரப்பன் கோரியுள்ளதாக கன்னட நடிகர் அம்பரீஷ் கூறியுள்ளார்.

ராஜ்குமாரை விடுவிப்பது தொடர்பாக தமிழக முதல்வர் கருணாநிதியுடன் பேசுவதற்குசென்னை சென்றிருந்த கர்நாடக முதல்வருடன் அம்பரீஷும் சென்றிருந்தார். அப்போதுவீரப்பன் அனுப்பியிருந்த ஆடியோ கேசட்டைத் தானும் கேட்டதாக கூறிய அம்பரீஷ்,கர்நாடக சிறையில் தடா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளவர்களை விடுவிக்கவேண்டும் என்று வீரப்பன் கோரியுள்ளான். பணம் ஏதும் அவன் கேட்கவில்லை.

வீரப்பன் மொத்தம் எட்டு நிமிஷம் மட்டுமே கேசட்டில் பேசியிருந்தான். வேறுகோரிக்கை எதையும் அவன் வைக்கவில்லை என்றார்.

இதற்கிடையே, ராஜ்குமாரை மீட்பது தொடர்பாக காட்டுக்குள் சென்று வீரப்பனுடன்பேசத் தயாராக இருப்பதாக நடிகர் விஷ்ணுவர்த்தன் கூறியுள்ளார். காத்மாண்டுசென்றுள்ள அவர் அங்கிருந்து இந்தத் தகவலை தெரிவித்துள்ளதாக அம்பரீஷ்தெரிவித்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+