400 விக்கெட்டுகளை வீழ்த்தினார் ஆம்புரோஸ்
தேயிலை விவசாயிகளுக்கு ஆதரவாக அதிமுக ஆர்ப்பாட்டம்
கோவை:
ஊட்டி கலெக்டர் அலுவலகம் முன்பு அ.தி.மு.க.வினர் ஜூலை 31ம் தேதி ஆர்ப்பாட்டம்நடத்தினர்.
தேயிலை விவசாயிகளுக்கு ஆதரவாக நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில், அ.தி.மு.க. அவைத்தலைவர் காளிமுத்து தலைமை வகித்தார்.
அவர் பேசும்போது, வெளிநாட்டிலிருந்து தேயிலை இறக்குமதி செய்வதால் தான் இங்குவிலை வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. இதற்கு முரசொலி மாறனே முக்கிய பொறுப்பு. அப்பாவிமக்கள் மீது போலீசார் நிடத்திய தாக்குதல் கண்டிக்கத் தக்கது எனக் கூறியுள்ளார்.
இது தவிர, தேயிலை விவசாயிகளுக்கு ஆதரவாக நீலகிரி பார் கவுன்சில் ஜூலை 31ம்தேதி நீதிமன்றப் புறக்கணிப்பில் ஈடுபட்டனர். நீலமலை விவசாயிகள் சங்கம், சி.ஐ.டி.யூ.அனைத்துக் கவுண்டர்கள் பேரவை, ஜனதா தளம் உட்பட பல்வேறு அமைப்புகள்,விவசாயிகள் மீது நடந்த தாக்குதலுக்குக் கண்டனம் தெரிவித்துள்ளன. நீலகிரியில் தற்போதுஅமைதியான சூழ்நிலை திரும்புகிறது.












Click it and Unblock the Notifications