For Daily Alerts
Just In
400 விக்கெட்டுகளை வீழ்த்தினார் ஆம்புரோஸ்
பெங்களூரில் பதற்றம் தொடர்கிறது
பெங்களூர்:
கன்னட நடிகர் ராஜ்குமார் கடத்தப்பட்டதை கண்டித்து கர்நாடகம் முழுவதும்இரண்டாவது நாளாக பந்த் நடந்தது.
பந்த்துக்கு யாரும் அழைப்பு விடுக்கவில்லை. ஆனால், வன்முறை சம்பவங்கள்மூளலாம் என்பதால் பஸ்களை அரசு நிறுத்திவிட்டது. கடைகள் திறக்கப்படவில்லை.பள்ளி-கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது.
மண்டியா, மைசூர் மாவட்டங்களில் பந்த்தின் பாதிப்பு அதிக அளவில் இருந்தது.மண்டியாவில் ராஜ்குமார் ரசிகர்கள் சங்கம் பந்த்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.மைசூர், மங்களூர், மண்டியாவில் ரயில்கள் மறிக்கப்பட்டன.
பெங்களூரில் சாலைகள் வெறிச்சோடிக் கிடந்தன. ஆனால், தமிழக-கர்நாடக எல்லைப்புறத்தில் உள்ள ஈரோடு மாவட்ட பன்னாரி, சத்தியமங்கலம், தாளவாடி பகுதிகளில்அமைதி திரும்பி வருகிறது.
Comments
Story first published: Tuesday, August 1, 2000, 5:30 [IST]