காஷ்மீரில் 3 தீவிரவாதிகள் உட்பட 5பேர் சாவு
இந்தியா வருகிறார் "கம்ப்யூட்டர் கிங் பில் கேட்ஸ்
டெல்லி:
மைக்ரோசாப்ட் கார்ப்பரேஷன் நிறுவனத் தலைவர் பில் கேட்ஸ் செப்டம்பர் மாதம்இந்தியா வருகிறார் என மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் இந்தியக் கிளைஅறிவித்துள்ளது.
பில் கேட்ஸ் இந்தியாவுக்கு வருவது இது இரண்டாவது முறையாகும். இந்தியாவில்மைக்ரோ சாப்ட் நிறுவனம் தொடங்கி 10 ஆண்டு நிறைவடைந்துள்ள வேளையில்கேட்ஸ் வருவது குறிப்பிடத்தக்கது.
மைக்ரோ சாப்ட் நிறுவனம் சமீபத்தில் அறிமுகப்படுத்திய "நெட் யுத்தி குறித்துமைக்ரோ சாப்ட் நிறுவன வாடிக்கையாளர்கள், பங்குதாரர்கள், சாப்ட்வேர்தயாரிப்பாளர்கள் மற்றும் முக்கிய அரசு உயர் அதிகாரிகளிடையே பேசுவார்.
மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் இந்தியக் கிளை, இந்தியாவில் கடந்த 10 ஆண்டுகளாகசெயல்பட்டு வருகிறது. டெல்லி, பெங்களூர், மும்பை, கல்கத்தா மற்றும் சென்னைநகரங்களில் இதன் அலுவலகங்கள் உள்ளன.
யு.என்.ஐ.