வீரப்பனுக்குப் பொதுமன்னிப்பு வழங்கக் கோருகிறார் ராமதாஸ்
பெங்களூரில் பந்த் கிடையாது என்கிறார் கர்நாடக முதல்வர்
பெங்களூர்:
பெங்களூரில் வியாழக்கிழமை பந்த் நடத்தப்படும் என்று பரப்பப்படும் வதந்தியை நம்ப வேண்டாம்என்று கர்நாடக முதல்வர் எஸ்.எம்.கிருஷ்ணா கூறியுள்ளார்.
பெங்களூரில் அவர் கூறுகையில், நடிகர் ராஜ்குமாரை மீட்க அனைத்து நடவடிக்கைகளும்எடுக்கப்பட்டுள்ளன. வீரப்பனைச் சந்திக்க தூதர் கோபால் முக்கியமான பயணத்தைமேற்கொண்டுள்ளார். இந்த நேரத்தில் பிற தகவல்களை வெளியிட இயலாது.
ராஜ்குமாரின் ஒரு மகன் தற்போது சென்னையில் உள்ளார். இந்த விஷயத்தில் இதற்கு மேல்இப்போதைக்கு எதுவும் சொல்ல முடியாது.
வதந்திகளைப் பரப்புவோர் கடுமையாகத் தண்டிக்கப்படுவர். பெங்களூரில் வன்முறைச் செயல்கள்நடந்துள்ளதாக கூறப்படுவதில் உண்மையில்லை.
பள்ளிகள், கல்லூரிகள் இன்னும் திறக்கப்படவில்லை. பெங்களூர், ஊரகம், பெங்களூர்,மைசூர், சாம்ராஜ்நகர் ஆகிய மாவட்டங்களில் இன்னும் இரு தினங்களுக்கு இவை திறக்கப்பட மாட்டாது என்றார்கிருஷ்ணா.












Click it and Unblock the Notifications