வன்முறை வரலாம் ... இலங்கை அமெரிக்கர்களுக்கு எச்சரிக்கை
கேஸட்டில் வீரப்பன் கடும் மிரட்டல்
சென்னை:
ராஜ்குமாரின் மனைவி பார்வதம்மாவிடம் கொடுத்தனுப்பிய கேசட்டில் வீரப்பன் மிகவும் மிரட்டல்விடும் பாணியில் பேசியிருப்பதாகத் தெரிகிறது.
முன்னதாக இந்த கேஸட்டில் என்ன கூறப்பட்டிருந்தது என்பதை அரசு வெளியிடவில்லை. இப்போது தான்அதில் கூறப்பட்டுள்ள விவரம் வெளியாகியுள்ளது.
தன்னை பிடிக்க முயன்றாலோ, அல்லது தனது கோரிக்கைகளை நிறைவேற்றத் தவறினாலோ மிகக்கடுமையான விளைவுகள் ஏற்படும் என எச்சரித்துள்ளார் வீரப்பன்.
கேஸட்டில் வீரப்பன் கூறியிருப்பதாவது:
ராஜ்குமாரின் நடவடிக்கைகளை தொடர்ந்து கண்காணித்து வந்தேன். மிகவும் திட்டமிட்டுத்தான் அவரைக்கடத்தியுள்ளேன். ராஜ்குமாரும் முன்னாள் முதல்வர் பங்காரப்பாவும் உறவினர்கள் என்பதும் எனக்குத்தெரியும்.
பாவம் பார்த்து யாரையும் நான் விடுவிக்க மாட்டேன். எனது கோரிக்கைகளை சொல்லிஅனுப்புவேன். அதை நிறைவேற்ற வேண்டும்.
நான் சோர்ந்து போயுள்ளேன். யாரையும் கொல்லமாட்டேன் என்று நீங்கள் நினைத்தால் அது தவறு.முன்பு இருந்த நிலைமை இப்போது இல்லை. அப்போது நான் தனி மனிதன். அதனால் தான் சரணடையவாய்ப்பு கேட்டு உங்களிடம் வந்தேன். பிணைக் கைதிகளையும் விடுவித்தேன். ஆனால், இப்போது நிலைமைமாறிவிட்டது. நான் மிகுந்த பலத்துடன் உள்ளேன்.
எனது தம்பியும் 5 கூட்டாளிகளும் தமிழக போலீசிடம் சரணடைந்தனர். அவர்களை தமிழக அரசுகாவலில் வைத்திருந்தது. ஆனால், கர்நாடக முதல்வராக இருந்த தேவ கெளடா அவர்களை தனதுமாநிலத்துக்கு கொண்டு சென்று அதிகாரிகளுடன் சேர்ந்து விஷம் வைத்துக் கொன்றார்.
கடந்த முறை நான் பொது மன்னிப்பு கேட்டு ஆட்களை கடத்தியபோது அப்போதை முதல்வர் படேல்,டெல்லிக்கு சென்று ராணுவ டாங்கிகளையும் விமானங்களையும் கேட்டார். நீங்கள் ஏவுகணைமட்டுமல்ல, அணு குண்டு கொண்டு வந்தால் கூட இந்த முறை நான் அஞ்ச மாட்டேன்.
ஒரு இன்ச் கூட நான் இறங்கி வர மாட்டேன். நான் நீங்கள் நினைப்பது போல அல்ல. இதை நான் ஏன்சொல்கிறேன் என்றால், கடந்த முறை நான் பயத்தினாலோ அல்லது பாவப்பட்டோ 6 பேரையும்விடுதலை செய்தேன் என்று நீங்கள் நினைத்துவிடக் கூடாது.
எனக்கு சில திட்டங்கள் உள்ளன. எப்போது எதை செய்ய வேண்டும் என்று எனக்குத் தெரியும். எனதுகோரிக்கைகளை ஏற்று தூதரை அனுப்பினால், பிணைக் கைதிகள் பத்திரமாக திரும்புவர்.
இவ்வாறு கேஸட்டில் வீரப்பன் கூறியுள்ளார்.