இந்த வாரம்
கோட்டை முன்பாக.11-ம் தேதி இ.கம்யூ. ஆர்ப்பாட்டம்
சென்னை:
தேயிலை விவசாயிகளுக்கு ஆதரவாக சென்னையில் கோட்டை முன்பு ஆகஸ்ட் 11-ம்தேதிஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக கட்சியின் தமிழ் மாநிலச் செயலர் என். சங்கரய்யா வெளியிட்டுள்ளஅறிக்கை:
தமிழகத்தில் தேயிலை விவசாயிகள் கடும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர்.
ரூ.19-க்குக் கிடைத்த ஒரு கிலோ பச்சைத் தேயிலையின் விலை இப்போது ரூ. 4 ஆகக் குறைந்துவிட்டது.இதனால், சுமார் இரண்டு லட்சத்துக்கும் அதிகமான தேயிலை விவசாயிகளின் குடும்பத்தினர் கடும்பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர்.
வெளி நாடுகளில் இருந்து தேயிலையை இறக்குமதி செய்ய மத்திய அரசு அனுமதித்ததே இப்பிரச்சினைக்குக் காரணம். இதையடுத்து வெளிநாட்டிலிருந்து தேயிலை இறக்குமதி செய்வதற்குத் தடைவிதிக்க வேண்டும் என்றும், பச்சைத் தேயிலை கிலோ ஒன்றுக்கு
ரூ.15 என விலை நிர்ணயம் செய்யவேண்டும் என்றும் கோரி தேயிலை விவசாயிகள் போராடிவருகின்றனர்.
விவசாயிகளின் நியாயமான கோரிக்கையை நிறைவேற்றாமல் அவர்கள் மீது அடக்குமுறையைமத்திய, மாநில அரசுகள் மேற்கொண்டுள்ளன. இது கண்டிக்கத்தக்கது. தேயிலை விவசாயிகளுக்குஆதரவாக சென்னையில் கோட்டை முன்பு ஆகஸ்ட் 11-ம் தேதி இந்தியகம்யூனிஸ்ட் கட்சி சார்பில்ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்றார் சங்கரய்யா.












Click it and Unblock the Notifications