இந்த வாரம்
இந்தியா-பாக் இடையே அணு ஆயுதப் போர் வரும்...எச்சரிக்கிறது ரஷ்யா
மாஸ்கோ:
இந்தியா-பாகிஸ்தான் நாடுகளுக்கிடையே அடுத்த 10 அல்லது 15 ஆண்டுகளுக்குள் அணு ஆயுத யுத்தம் ஏற்பட சாத்தியக்கூறுகள் உள்ளன என்றுரஷ்யாவின் முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அந்தேரி கோகோஷின் தெரிவித்துள்ளார்.
போரிஸ் எல்ட்சின் அதிபராக இருந்த போது தேசிய பாதுகாப்பு ஆலோசகராக இருந்தவர் அந்தேரி. இவர் தற்போது சர்வதேச பாதுகாப்புக் கழகத்தின்இயக்குநராக இருக்கிறார்.
ஆசியாவின் பாதுகாப்புப் பிரச்சனைகள் குறித்து பத்திரிகையொன்றில் அவர் எழுதியுள்ளதாவது:
தெற்காசிய நாடுகளில் அணு ஆயுத யுத்தம் வருவதற்கு அதிகமான சாத்தியக்கூறுகள் உள்ளன. 1998 ல் இந்தியாவும், பாகிஸ்தானும் அணுகுண்டு வெடித்துசோதனைகள் நடத்தின. இந்த நிலையில் சீனா ஆயுதங்களைக் குவித்து வருகின்றது.
அமெரிக்கா "ஏவுகணை எதிர்ப்பு ஏவுகணைத் திட்டத்தை செயல்படுத்துவதில் தீவிரம் காட்டிவருகிறது. இதனால் இந்தியாவும், சீனாவும் அணஆயுதங்களைக் குவிப்பதில் போட்டி போட்டுக் கொண்டு ஈடுபட்டு வருகின்றன.
சீனா, அடுத்த 10 ஆண்டுகளில் தற்போது இருக்கும் அணு ஆயுதங்களை விட 5 முதல் 6 மடங்கு அதிகமாக அணு ஆயுதங்கள் அதிகரிக்கும் வாய்ப்புக்கள்உள்ளது. அதனால் அடுத்த வல்லரசு நாடாக சீனா மாறவும் சாத்தியக்கூறுகள் உள்ளன.
இந்தியாவிடமும் அடுத்த 10 ஆண்டுகளில் தற்போது இருப்பதை விட 7 அல்லது 8 மடங்கு அணு ஆயுதங்கள் இருக்கும்.
அமெரிக்காவின் ஏவுகணை எதிர்ப்பு ஏவுகணை திட்டத்தை முறியடிக்கும் வகையில் சீனாவும், அதைத் தொடர்ந்து இந்தியாவும் ஈடுபடும்.
மேலும், ஈரானுக்கும், ஆப்கானிஸ்தானில் உள்ள தலிபான் படைகளுக்கும் இடையே சண்டை மூளும் அபாயமும் உள்ளன. பாகிஸ்தானும் இந்தியாவுக்குமிகப்பெரிய ஆபத்தைக் கொடுக்கும்.
இந்தியா, சீனா, ரஷ்யா ஆகிய மூன்று நாடுகளும் இணைந்து பாதுகாப்பு வளையத்தை ஏற்படுத்த வேண்டும் என்றார் கோகோஷின்.
ஐ.ஏ.என்.எஸ்.