இந்த வாரம்
மிசோரத்தில் அனுமதியின்றி நுழைந்த 100 பர்மியர்கள் கைது
கவுஹாத்தி:
இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான மிசோரத்தில் அனுமதியில்லாமல் நுழைந்தது தொடர்பாகவும், போதைப் பொருட்கள் கடத்தல் மற்றும்பல்வேறு குற்றங்கள் புரிந்தது தொடர்பாகவும் 100 க்கும் மேற்பட்ட பர்மா நாட்டுக்காரர்களை போலீசார் கைது செய்தனர்.
மிசோரம் காவல்துறை அமைச்சர் தான்லூயா அய்சாலில் இதுகுறித்துக் கூறுகையில், மிசோரத்தில் பர்மா நாட்டுக் காரர்கள் அனுமதியில்லாமல்நுழைவது அதிகரித்து வருகிறது. போரஸ் சர்வதேச எல்லைப்பகுதி வழியாக அவர்கள் இங்கு வந்து விடுகிறார்கள்.
அவர்களை பர்மாவுக்கே திருப்பி அனுப்பும் முயற்சியில் போலீசார் இறங்கியுள்ளனர். இங்கு அனுமதியில்லாமல் நுழையும் இவர்கள் பெரும்பாலும்போதைப்பொருட்கள் கடத்தலில் ஈடுபடுகின்றனர். வேறு பல குற்றங்களிலும் இவர்கள் ஈடுபட்டு வருகிறார்கள் என்று தெரிய வந்துள்ளது.
இந்த வாரத்தில் பர்மா நாட்டைச் சேர்ந்த 150 பேர் கைது செய்யப்பட்டு அய்சால் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அனுமதியில்லாமல் நுழையும்பர்மாக்காரர்களை அடையாளம் கண்டுபிடித்து அவர்கள் நாட்டுக்கே அனுப்பும்படியும், அவர்கள் மேல் சட்டப்படி நடவடிக்கை எடுக்கும்படியும்போலீசாருக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என்றார்.
பழங்குடி எம்எல்ஏ டுலூங்கால் கூறுகையில், பர்மாவிலிருந்து இங்கு வரும் மக்கள் மிசோரம் மக்களைப் போலவே தோற்றமளிக்கிறார்கள். மிசோமொழியையே அவர்கள் பேசுவதால் எளிதில் அடையாளம் கண்டுபிடிக்க முடியவில்லை என்றார்.
அய்சால் கல்லூரி மாணவர் பால் சைலோ கூறுகையில், மிசோரத்தில் நுழையும் இவர்கள் சயிகா, சம்பாய் மாவட்டங்களில் நுழைந்து விடுகிறார்கள்.போதைப் பொருட்களை இங்கு விற்பனை செய்வதால் மிசோரம் மக்கள் பலர் போதைப்பொருட்களுக்கு அடிமையாகி விடுகிறார்கள்.
சுத்தம் செய்யப்படாத ஊசிகள் மூலம் போதைப் பொருட்களை பயன்படுத்துவதால் 20 க்கும் மேற்பட்டோர் எச்.ஐ.வி.வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்என்று தெரிய வந்துள்ளது. இதுகுறித்து அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பர்மாவிலிருந்து வறுமை காரணமாக இங்கு வரும் மக்கள் தங்களை அடையாளம் காட்டிக்கொள்ளாமல் வீட்டு வேலை செய்து பிழைத்து வருகிறார்கள்.மிசோரத்தில் வாழ்ந்து வரும் இவர்கள் காலப்போக்கில் இங்கு வாழும் மக்களின் நிலங்கள் மற்றும் சொத்துக்களில் பங்கு கேட்கும் அபாயமும்இருப்பதாக அவர் கூறினார்.
ஐ.ஏ.என்.எஸ்.












Click it and Unblock the Notifications