இந்த வாரம்
அடையாள அட்டை வழங்கும் பணி தீவிரம்
சென்னை:
தமிழகத்தில் வாக்காளர்களுக்கு புகைப்பட அடையாள அட்டை வழங்கும் பணிதீவிரமாக நடைபெற்று வருகிறது.
இது தொடர்பாக, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
தமிழகத்தில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டப் பேரவைத் தேர்தல்வாக்குப்பதிவுக்கு வாக்காளர் புகைப்பட அடையாள அட்டைகட்டாயமாக்கப்பட்டுள்ளது.
ஆகவே, இதுவரை வாக்காளர் புகைப்பட அட்டை வழங்கப்படாதவர்களுக்குஅடையாள அட்டை வழங்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
சென்னையில் ராயபுரம் சட்டப்பேரவைத் தொகுதியில் வாக்காளர் அடையாள அட்டைவழங்கும் பணி முடிந்துவிட்டது. அங்கு சுமார் 22 ஆயிரம் பேருக்கு அடையாளஅட்டை வழங்கப்பட்டுள்ளது.
ஆரணியில் ஜூலை 27-ம் தேதிதான் அடையாள அட்டை வழங்கும் பணிதொடங்கப்பட்டது. 31-ம் தேதி வரை சுமார் 6 ஆயிரம் அட்டைகள்வழங்கப்பட்டுள்ளன. 3-ம் தேதி இப் பணி முடிவடைந்துவிடும்.
அச்சிருப்பாக்கம் தொகுதியில் அடையாள அட்டை வழங்கும் பணியில் பிரச்சினைஏற்பட்டுள்ளது. விரைவில் பிரச்சினை தீர்க்கப்பட்டு அடையாள அட்டை வழங்கும்பணி மேற்கொள்ளப்படும்.
ஈரோடு, சிவகங்கை, காஞ்சிபுரம் தொகுதிகளில் அடையாள அட்டை வழங்கும் தேதிமாற்றியமைக்கப்பட்டுள்ளன.
தேர்தல் ஆணையம் மேற்கொண்டுள்ள இப் பணிகளுக்குப் பொது மக்கள் ஒத்துழைப்புமிக மிக அவசியம். ஆகவே, அடையாள அட்டை வழங்கும் மையங்களுக்குவாக்காளர்கள் தாங்களாகவே நேரில் சென்று தங்கள் பற்றிய விவரங்களைத்தெரிவிக்கும்படிகேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.